districts

img

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 22 ஆயிரம் கிலோ பழங்களை பறிமுதல் செய்து அழித்த அதிகாரிகள்

கோவை, மே 10- கோவையில், உணவு பாதுகாப்புத்துறை யினர் செவ்வாயன்று மேற்கொண்ட சோத னையில், கல் மூலம் பழுக்க வைத்த 22 ஆயி ரம் கிலோ பழங்களை பறிமுதல் செய்து  அழித்தனர். உடலுக்கு தீங்கை விளைவிக் கும் உணவு பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். தமிழ்நாட்டில் மாம்பழம் சீசன் தொடங்கி யுள்ளதால் கோவை மார்க்கெட்டுகளுக்கு சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு மாம்பழம் விற் பனை செய்யப்படுகிறது. தவிர கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அனைத்து பழங்களின் விற்பனையும் அதி கரித்துள்ளது. பழங்களை சீக்கிரம் பழுக்க  வைப்பதற்காக வியாபாரிகள் ரசாயனங் களை பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர் கள் குழு, கோவை மாநகர் பகுதியில் உள்ள பழக்குடோன்கள் மற்றும் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, வைசியால் வீதி, பெரிய கடைவீதி, கருப் பன கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் 8 குழுவாக மொத்தம் 16 பேர் மாவட்ட நியமன அலுவலர் தலைமை யில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.  இதில், 45 கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 16 கடை மற் றும் குடோன்களில் சிறிய ரசாயன பொட்ட லங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டு உள்ளதை கண்டுபிடித்து, பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 22,618 (22.5 டன்) கிலோவும், 2,510 (2.5 டன்)  கிலோ சாத்துகுடி ஆக மொத்தம் 25,128 கிலோ  (சுமார் 25 டன்) எடை பறிமுதல் செய்தனர்.  இதன் சந்தை மதிப்பு, சுமார் ரூ.12 லட்சத்து 56 ஆயிரத்து 400 என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பழங்களை மாநக ராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று,  அழிக்கபட்டது,

இதனை, உரமாக தயாரிக்க முழுவதுமாக அரைக்கப்பட்டது.  முன்னதாக, ரசாயனம் மூலம் பழங்களை  பழுக்க வைத்த 16 பழக்கடை மற்றும் குடோன் களுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய ரசா யன பாக்கெட்டு அனைத்தும் பறிமுதல் செய் யப்பட்டது. மேலும் இதுபோன்ற கார்பைட் கல், எத்திலீன் இரசாயன பவுடர் பாக்கெட்டு களை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம் பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி,  வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாக லாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.  இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந் தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பு உள் ளது. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலு விலக்க வாய்ப்பு உள்ளது.  எனவே, இது போன்று முறையற்ற விகி தத்தில் ரசாயனங்கள் கொண்டு மாம்பழங் களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் மாவட் டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி  எச்சரித்துள்ளார்.