districts

img

சிபிஎம் போராட்ட அறிவிப்பால் உடனடி நடவடிக்கை 3 மாதத்திற்குள் வீட்டுமனை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி

நாமக்கல், அக்.19- ராசிபுரம் அருகே வசிக்கும் பட்டி யலின மக்களுக்கு 3 மாதத்திற் குள் வீட்டுமனை வழங்கப்படும் என  அதிகாரிகள் உறுதியளித்துள்ள னர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்  வட்டம், தொப்பப்பட்டி ஊராட்சி யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டி யலின மக்கள் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாகவும், பலர் வாடகை வீட் டிலும் வசித்து வருகின்றனர். சுமார்  69 குடும்பங்களைச் சேர்ந்தவர்க ளுக்கு இலவச வீட்டுமனை பட்டா  வழங்க வேண்டும் என தொடர்ந்து  சிபிஎம் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வந்தது. மேலும், தமிழ் நாடு முதல்வர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர், ராசிபுரம் வட்டாட்சியர், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம  சபை கூட்டங்களிலும் 22 முறைக்கு  மேல், மனு அளித்தும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே, தொப்பப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலம் ஏராள மானவை உள்ளன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களும் உள் ளன. அதை கையகப்படுத்தி ஏழை,  எளிய மக்களுக்கு வழங்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தொப்பப் பட்டி கிளை சார்பில், தொப்பப்பட்டி மாரியம்மன் கோவிலில் துவங்கி, நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய் வாளர் அலுவலகம் வரை நடை பயணமும், தொடர் காத்திருப்புப்  போராட்டமும் வெள்ளியன்று நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நடைபயணத்திற் காக சிபிஎம் தலைமையில் பொது மக்கள் திரண்ட நிலையில், இது குறித்து தகவலறிந்த ராசிபுரம் வட் டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ராசிபுரம் வட் டாட்சியர் சரவணன், நாமகிரிப் பேட்டை காவல் ஆய்வாளர் அம் பிகா, வருவாய் ஆய்வாளர், தொப் பபட்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கொண்ட அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் செல்வ ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் வி.பி.சபாபதி, தொப்பப்பட்டி கிளைச் செயலாளர் குப்பண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இந்த பேச்சு வார்த்தை நிறைவில், முதற்கட்ட மாக அரசு புறம்போக்கு நிலங்கள்  கண்டறியப்பட்டு, அதை ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்து விவரம் சேகரித்து, அந்த  நிலங்களும் மீட்கப்பட்டு, தகுதி யானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவையாவும் மூன்று மாத காலத் திற்குள் செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த னர். இதையடுத்து போராட்டத் திற்கு திரண்ட பொதுமக்கள் அங் கிருந்து கலைந்து சென்றனர்.