உடுமலை, ஆக. 8 - உடுமலை ராஜேந்திரா சாலை அரசு பள்ளியில் தமிழக அரசின் சார்பில் இல வசமாக போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் நடைபெறும் குரூப் இரண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தற்பொழுது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் சிறப்பு வகுப்புகளை நடத்து கிறார். மாணவர்களுக்கு சிறப்பு வகுப் புகள் மற்றும் வாரம் ஒரு முறை மாதிரி தேர்வு நடைபெறும். இதில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்க ளுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்ப டுத்து வருகிறார். போட்டி தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகை யில், மாதிரி தேர்வுகளை நடத்தி அதற்கு பரிசுகளை வழங்குவது மாண வர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த வகுப்புகளில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ், பயிற்சி மைய பொறுப்பாளர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செல்லத் துரை மற்றும் சமூக ஆர்வலர்கள் சண் முகசுந்தரம், விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.