districts

img

கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோவை, ஆக. 21- கோவை புறநகர் பகுதிகளில் கனமழையின் காரணமாக  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் இடி மற்றும் மின்ன லுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நி லையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் புதனன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. தொண்டா முத்தூர், நரசிபுரம், ஆலாந்துறை, பேரூர், செட்டிபாளையம், வடவள்ளி, மருதமலை மதுக்கரை போன்ற பகுதிகளில் காலையில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்து  வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ - மாண விகள், விவசாய கூலி வேலைக்கு மற்றும் நகர் பகுதியில் பல் வேறு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிப்ப டைந்தனர்.