districts

img

விவசாய நிலம் அருகே குப்பைகளை கொட்ட எதிர்ப்பு

சேலம், ஜன.31- சங்ககிரி அருகே விவசாய நிலம் அருகே பேரூராட்சி குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி  வட்டம், அரசிராமணி பேரூராட் சிக்குட்பட்ட பகுதியில் சேகரமா கும் குப்பைகளை, குறுக்குப் பாறையனூரில் பேரூராட்சி நிர்வாகம் கொட்ட வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் குப்பைக் கொட்ட வரும் வாகனங்களை சிறைப்பிடித்தல், கோட்டாட்சி யர் அலுவலகம் முற்றுகை போன்ற பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தி னர் வெள்ளியன்று அரசிராமணி  பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில், நிர்வாக  அலுவலரிடம் மனு அளிக்கப்பட் டது. அப்போது, மாவட்ட ஆட்சி யர், பேரூராட்சி உயர் அலுவலர் கள், வருவாய் துறை என சம் மந்தப்பட்ட அனைத்துத்துறை உயர் அதிகாரிகளுடன் மாற்று  இடத்தில் கொட்டுவது குறித்து  ஆலோசித்து வருகிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக் கும், என அதிகாரிகள் கூறினார். கோரிக்கை நிறைவேறும் வரை  எங்களின் போராட்டம் தொட ரும். ஒருபோதும் குறுக்குப் பாறையனூரில் குப்பைகளை கொட்ட அனுமதிக்க மாட்டோம், என போராட்டக்காரர்கள் தெரி வித்தனர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்திற்கு கே.பி.ராமசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாநில துணைச்செயலாளர் பி.பெரு மாள், மாவட்டச் செயலாளர்  ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, தாலூகா தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் சீனிவாசன், கிளை நிர்வாகிகள் மணி, நாரா யணன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் ஜி.கே. மாயவன் மற்றும் பாதிக்கப்ப டும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.