கோவை, நவ.7– குடியிருப்பு பகுதியில் மதுபானக் கடை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரி வித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் காளப்பட்டி, கைக்கோளாபாளையம் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, பச்சாபாளையத்தில் இருந்து டாஸ்மாக் மதுபானக்கடை குடி யிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள காளப்பட்டி - கைக் கோளபாளையம் சாலையில் அமைக் கும் முயற்சிகள் நடைபெறுகிறது. போக்குவரத்து அதிகமான, மிகக்குறு கலான இச்சாலையில் புதிதாக மது பானக்கடை வருவதால் பெரும் இடை யூறு ஏற்படும். அதிகப்படியான பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் மாணவிகள் மற்றும் வேலைக்கு செல் லும் பெண்கள் இந்த மதுபானக்கடை அமையவுள்ள பகுதி வழியாகத்தான் நடந்து சென்று வர வேண்டும். இது பாது காப்பின்மையக அமையும். ஆகவே, இப்பகுதியில் அமையவுள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி னர். முன்னதாக ஆட்சியரிடம் மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் மனு அளித்தனர். இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.