districts

img

சத்துணவு ஊழியர் சங்க கருத்தரங்கம்

ஈரோடு, செப். 17- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாணிக்கவிழா கருத்தரங்கம் ஈரோடு அரசு  ஊழியர் சங்க அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. சத்துணவு ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளான காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், போன்ற கோரிக்கைகளில் எந்த முன்னேற்ற மும் இல்லை. அதேசமயம் தேர்தல் கால வாக் குறுதியை திமுக அரசு கிடப்பில் போட்டுள் ளது. எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள கோரிக்கையை தேர்தல் கால வாக்குறு திப்படி நிறைவேற்ற வலியுறுத்தி ஊழி யர்களை ஸ்தாபன ரீதியாக தயார்படுத்த கருத்தரங்கம் நடைபெற்றது.  இக்கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்ட  துணை தலைவர் பா.விஜயன் தலைமை வகித்தார். கே.பழனியம்மாள், ஆர்.தமிழ் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எம்.கண்ணன் வர வேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ச.விஜயமனோகரன் தொடக்க உரை யாற்றினார். தலைமை பண்புகள் குறித்து அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் பேசினார். சத்து ணவு திட்டமுமு், ஆட்சியாளர்களின் நிலைப் பாடும் என்ற தலைப்பில் சங்கத்தின் மாநில  துணைத் தலைவர் ஆ.பெரியசாமி கருத் துரையாற்றினார். இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர் எம்.செல்வி நன்றி கூறினார்.