தருமபுரி, அக்.11- பணி நிரந்தரம் செய்ய வலியு றுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட செவி லியர்கள் கைது செய்யப்பட்ட சம்ப வத்தை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமி ழக அரசை வலியுறுத்தி, சென்னை மருத்துவக்கல்வி இயக்கம் வளாகத் தில் செவிலியர்கள் போராடி வரு கின்றனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல் துறை கைது செய்துள்ளது. இதனை கண்டித்தும், அவர்களை உடனடி யாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங் கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைச்செயவாளர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் மாநில துணைத்தலைவர் கோ. பழனியம்மாள், மாவட்டச் செயலா ளர் ஏ.சேகர், மாவட்டப் பொருளாளர் பி.எஸ்.இளவேனில், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, வட்ட நிர்வாகிகள் குமரன், பன்னீர் செலவம் உட்பட பலர் கலந்து கொண் டனர். கோவை இதேபோன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ் நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் சாமிநா தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவத் துறை ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சிவகுமார், மாவட்ட துணைத்தலைவர் அம்ச வேணி, சாந்தி, வருவாய்த்துறை ஊழி யர்கள் சங்க மாவட்ட துணைத்தலை வர் சையது உசேன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறி னார்.