சேலம், மார்ச் 23- டாஸ்மார்க் கடையை அகற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத் திந்திய மாதர் சங்கத்தினர், நடை பிணத்துடன் நூதன முறையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். சேலம் மாநகரம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் பகுதியில் டாஸ் மாக் கடை செயல்பட்டு வருகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலை களில் 500 மீட்டருக்குள் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மதிக்காமல், இப்பகுதி யில் டாஸ்மாக் மதுக்கடை அமைக் கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் அதிகம் உள்ள இப்பகுதியில், மதுப் பிரியர்களால் பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது.
முக்கியமாக அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் வருவதற்கும் மற்றும் போக்குவரத்திற்கும் மிகவும் பாதிப்பாக இந்த டாஸ்மாக் கடை உள்ளது. மேலும், பொது வெளியில் சிறுநீர் கழிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல் களில் ஈடுபடுவதால், பொதுமக்கள் இப்பாதையில் நடமாடுவதற்கே அச்சப்படும் சூழல் உள்ளது. இது சம்பந்தமாக டாஸ்மாக் நிர்வாகத்திடமும். மாவட்ட நிர்வா கத்திடம் பலமுறை மனு அளிக்கப் பட்டன. ஆனால், எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, வாலிபர் மற்றும் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வாலிபர் சங்க கிழக்கு மாநகரத் தலைவர் எஸ்.கோபிராஜ், மாதர் சங்க கிழக்கு மாநகர தலைவர் ஆர்.கவிதா ஆகியோர் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.பெரியசாமி, மாவட்ட தலைவர் வி.ஜெகநாதன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தேவி, தலைவர் ஆர்.வைரமணி, மாநில குழு உறுப்பினர் ஐ.ஞான சௌந்தரி, கிழக்கு மாநகர துணைத் தலைவர் சாவித்திரி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். முன்னதாக, டாஸ்மாக் மதுக் கடையால் இப்பகுதி பொதுமக்கள் நடை பிணமாக இருப்பதை சித்த ரித்து, நடை பிண வேடம் அணிந்து ஊர்வலமாக மதுக்கடையை முற்றுகையிட வந்தனர். இவர் களை போலீசார் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.