districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்ட அறிவிப்பு

நாமக்கல், டிச. 25-  நாமக்கல் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு, கோரிக்கை களை வலியுறுத்தி தொடர் காத்தி ருப்பு போராட்டம் நடத்தப்படும் என  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தினர் அறிவித் துள்ளனர். நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின், சேந்தமங்கலம் தாலுகாக் குழு அமைப்பு மாநாடு, காமாட்சி திருமண மண்டபத்தில் நடை பெற்றது. சங்கத்தின் நிர்வாகி  என்.சிவா தலைமையில் நடைபெற்ற மாநாட் டில், அகில இந்திய செயல் தலைவர்  எஸ்.நம்பு ராஜன், மாவட்ட அமைப்பா ளர் எம்.ஆர்.முருகேசன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பா ளர் ஏ.ரங்கசாமி, இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள்  வேலையை முழுமையாக தொடர்ச்சி யாக வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாத மாற்றுத் திறனாளிகள் குடும் பங்களுக்கு வீட்டு மனை நிலம் வழங்க வேண்டும். நிலம் இருப்பவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். குடி யிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்திற்கு மாற்றுத்திறனாளி நல அலுவலர் உட னடியாக நிரந்தரமாக நியமிக்க வேண் ்டும். மாற்றுத்திறனாளிகள் சொந்த மாக சுயதொழில் செய்ய அனைத்து  வங்கிகளிலும் கடன் வழங்க வேண் டும். மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து ஜன. 30 ஆம் தேதி நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்  நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டில், சேந்தமங்கலம் தாலு காக் குழு கௌரவத் தலைவராக என்.சிவா, தலைவராக ஆர்.ரமேஷ், செய லாளராக ஏ.முருகேசன், பொருளா ளராக கே.ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.