districts

img

சாதிச்சான்றிதழ் கேட்டு செப்.11இல் மனு கொடுக்கும் போராட்டம்

நாமக்கல், ஆக.29- மலைக்குறவன் இன மாணவ, மாணவிகளுக்கு பழங்குடியின சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, செப்.11 ஆம் தேதி யன்று மனு கொடுக்கும் போராட்டம்  நடைபெற உள்ளதென, மலைக்குற வன் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மலைக்குறவன் பழங்குடி முன்னேற்ற சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பேரவை, முள் ளுக்குறிச்சியில் வியாழனன்று, முருகேசன் தலைமையில் நடை பெற்றது. மணிகண்டன் வரவேற் றார். சங்கத்தின் மாநிலத் தலைவர் தனபால் துவக்கவுரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஏ.டி.கண்ணன், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்டச் செய லாளர் கே.சின்னசாமி, ஒன்றிய நிர் வாகிகள் ஏ.பழனிச்சாமி, எஸ்.சுப்பி ரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். தமிழ்நாடு மலைக்குறவன் பழங் குடி முன்னேற்ற சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து, சங்கத் தின் பொதுச்செயலாளர் ஏ.வி.சண் முகம் பேசினார்.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவரும், சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபு சிறப்புரையாற்றுகை யில், நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைக் குறவன் சமூகத்தைச் சேர்ந்த பழங் குடியின மக்கள் வசித்து வருகின் றனர். இவர்களுக்கு இதுநாள் வரை  சாதிச்சான்றிதழ் வழங்கப்படாத தால், தமிழக அரசின் நலத்திட்டங் களை பெற முடியாமல் தவித்து வரு கின்றனர். குறிப்பாக மாணவ, மாண விகள் உயர்கல்விக்கு செல்ல முடி யாமலும், கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் மிகப்பெரிய பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். சாதிச்சான் றிதழ் கேட்டு பலமுறை மலைக்குற வன் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இணைய வழியில் விண்ணப்பித் தும், நேரடியாக எழுத்துப்பூர்வ மாக விண்ணப்பித்தும், போராடி யும் இதனால் வரை சாதிச்சான்றிதழ் தர மாவட்ட நிர்வாகம் மறுத்து வரு கிறது. எனவே, தமிழ்நாடு அரசும், நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் உட னடியாக தலையிட்டு, மலைக்குற வன் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியின சாதிச்சான்றிதழ் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தி செப்.11 ஆம் தேதி யன்று நாமக்கல் வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் மனு  கொடுக்கும் போராட்டம் நடைபெற உள்ளதென, மலைக்குறவன் பழங் குடி முன்னேற்ற சங்கத்தின் பேர வைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளதென, தெரிவித் தார். இதைத்தொடர்ந்து சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவராக மணிகண்டன், செயலாளராக முரு கேசன், பொருளாளராக தங்க வேல், துணைத்தலைவர்களாக கீதா, சேகர், சரண்யா, கதிரேசன், ரஞ்சிதா, துணைச்செயலாளர்க ளாக ஆஷா, சுகன்யா, மணி, பழனி யப்பன், கீதா மற்றும் 23 பேர் மாவட் டக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.