districts

முதல்வரின் அறிவிப்பு இரண்டு ஆண்டுகள் ஆகியும் அரசிதழில் வரவில்லை - தொழில் கூட்டமைப்பு வேதனை

கோவை, செப். 28- ஒரே சொத்தின் மீது கூடுதலாக  வங்கி கடன் பெறும்போது, அட மான ஆவணங்களை “மீண்டும் மீண்டும் பதிவு செய்ய தேவை இல்லை என தமிழக முதல்வர் அறி வித்து இரண்டு ஆண்டுகள் ஆன  பின்னும் இன்னமும் அரசிதழில் வெளியிடப்படாதால், தொழில் முனைவோர்கள் சொல்லெண்ணா துயரத்தை அனுபவிப்பதாக தொழில்களின் கூட்டமைப்பான போசிய வேதனை தெரிவித்துள் ளது. இதுகுறித்து தமிழக முதல்வ ருக்கு போசியா சார்பில் அனுப்பப் பட்ட கடிதத்தில் கூறியிருப்பதா வது, தற்போது தொழிற்சாலை கள், வங்கிக் கடன்பெறும்போது, சொத்து அடமான ஆவணங்களை, சார்பதிவாளர் அலுவலகத்தில், உரிய கட்டணம் மற்றும் முத்திரை கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே அட மானம் கொடுத்த அதே சொத்தின் மீது அதே வங்கியில் கூடுதலாக கடன் தொகை பெறும்போது, புதிய  அடமான ஆவணங்களை மீண்டும்  பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.  2022 ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற “தோள் கொடுப்போம் தொழில்க ளுக்கு” என்ற தென்மண்டல மாநாட் டில் மாண்புமிகு முதல்வர். ஒரே  சொத்தின் மீது கூடுதலாக வங்கி கடன் பெறும்போது, அடமான ஆவ ணங்களை “மீண்டும் மீண்டும் பதிவு  செய்ய தேவை இல்லை” என்றும்,  இதற்கான விதிமுறைகள் மாற்றப்ப டும் என்றும் அறிவித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிற கும், அறிவிப்பை தொடர்ந்து, இது வரை அரசிதழ் அறிவிப்பு வர வில்லை. இதனால், அடமான ஆவ ணங்களை, மீண்டும் மீண்டும் பதிவு  செய்யவேண்டிய பழைய நடை முறையே தொடர்கிறது. எனவே  மாண்புமிகு முதல்வர், இதில் தலை யிட்டு அடமான ஆவணங்களை மீண்டும் மீண்டும் பதிவு செய்வதை,  நிறுத்துவதற்காக, அரசிதழ் அறி விப்பை, உடனடியாக வெளியிட்டு,  தொழிற்பிரிவினரின் சிரமத்தை களைய வேண்டும் என தெரிவித் துள்ளனர்.