districts

img

வட மாநில தொழிலாளர்கள் அச்சமின்றி வாழலாம்

உதகை, மார்ச் 15- விடுமுறை நாட்களில் வடமாநில தொழிலாளர்கள் உதகை  மார்க்கெட் உள் ளிட்ட பகுதிகளுக்கு எவ்வித  அச்சமின்றி வந்து செல்ல லாம் என காவல் கண்காணிப் பாளர் பிரபாகர் தெரிவித் தார். பீகார், ஜார்கண்ட் மாநில  தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் தாக்கப்பட்டதாக வீடியோ காட்சி களும், செய்திகளும் பரவின. இந்த விவ காரம் 2 மாநில சட்டசபையிலும் எதி ரொலித்தது. ஆனால் இந்த வீடியோக்கள் போலியானவை என்று தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத் திலும் போலீசார் வட மாநில தொழிலாளர் களை சந்தித்து எவ்வித அச்சமின்றி வாழ லாம் என அறிவுறுத்தி வருகின்றனர். இந் நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பிரபாகர் திங்களன்று மருத் துவக் கல்லூரி கட்டுமான பணியில் ஈடு பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்  கூறியதாவது, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளருக்கு எதிராக சமூக விரோதிகள்  வதந்தி பரப்பி வருகின்றனர். அமைதியாக  வேலை பார்த்து வரும் தொழிலாளர்களான நீங்கள் வதந்திகளை எக்காரணம் கொண் டும் நம்ப வேண்டாம். சமூக வலைதளங் களில் பரவி வருவது வதந்தி என உங்கள் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்களுக்கு தேவையான உதவி களை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.  யாருக்காவது ஏதேனும் பிரச்சனை என்றால்  24 மணிநேரமும் எங்களின் உதவி மையத்தை  நாடலாம். இதற்காக தனி கட்டுப்பாடு அறை, தொலைபேசி எண்களும் பயன் பாட்டில் உள்ளன. கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள நீங்கள்  வழக்கம் போல விடுமுறை தினங்களில் உதகை சந்தைக்கு எவ்வித அச்சமின்றி வந்து  தேவையான பொருட்களை வாங்கி செல் லாம். மேலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் காவல் துணை கண் காணிப்பாளர் யசோதா, ஆய்வாளர் சரஸ் வதி ஆகியோர் உடனிருந்தனர்.