districts

img

விதிமுறையை பின்பற்றாத தொழிற்சாலைகள் அமைச்சர் சு.முத்துச்சாமி எச்சரிக்கை

ஈரோடு, செப்.14- பெருந்துறை சிப்காட்டில் விதி முறையை பின்பற்றாத தொழிற் சாலைகள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துச்சாமி எச்ச ரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந் துறை சிப்காட் வளாக கழிவுகளால்  ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதனன்று  மாலை நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி, மாநிலங் களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா  ஆகியோர் முன்னிலை வகித் தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி கலந்துகொண்டு பல்வேறு அமைப்பினர் உட்பட பொதுமக்களிடம் இருந்து கருத்து களை கேட்டறிந்து பேசினார்.  இதன்பின் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு கருத்துகள் கேட் கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசை  பொறுத்த அளவில் தொழிற்சாலை களில் பணிபுரியும் தொழிலாளர் களின் நலனுக்காக, தொழிற் சாலைகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம் பொதுமக்கள் நலன் மற்றும் இயற்கை நலனை பாதுகாக்கும் வகையில் தொழிற்சாலைகளும் அரசின் விதிமுறைகளை முழுமை யாக பின்பற்ற வேண்டும். காற்று மற்றும் குடிநீர் மாசு  ஏற்படுத்தும் வகையில் விதிமுறை களை பின்பற்றாத தொழிற்சாலை கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிப்காட் தொழில் வளாகத்தில் ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்ய முடிவு  செய்யப்பட்டுள்ளது. சிப்காட் பாதிப்பு காரணமாக புற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகுவோ ரின் எண்ணிக்கை அதிகளவில்  இருப்பதாக தகவல் தெரிவித் துள்ளனர். இதற்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் புற்றுநோய் சிகிச்சைக் காக தனித்துறை உருவாக்க நடவ டிக்கை எடுக்கப்படும். சென்னி மலை ஒன்றியத்தில் குடிநீர்  ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள தாக கூறியுள்ளனர். அப்பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்  மூலமாக அங்கு குடிநீர் பிரச்ச னைக்கு தீர்வு காணப்படும். மேலும்,  சிப்காட்டில் உள்ள தொழிற் சாலைகள் விதிகளை மீறி சுத்தி கரிப்பு கழிவுநீரை வெளி யேற்றுவது கண்டுபிடிக்கப் பட்டால் சம்பந்தப்பட்ட தொழிற் சாலையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என் றார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மணிஷ், சென்னிமலை ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் காயத்ரி, மாவட்ட  ஊராட்சி கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ். செல்வம், பெருந்துறை வட்டாட் சியர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.