கோவை, ஜூன் 9- பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து விவ சாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் அறி வித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார் அணைக்கு, பல்வேறு நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளது. மொத்தம் 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையில், சுமார் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில், அணைக்கு தண்ணீர் வரும் போது, மலை முகடுகளில் இருந்து பாறைகள், கற்கள், மண், மரத்துண்டுகள் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டு, அணை யில் ஆங்காங்கே தேங்கி கொள்கிறது. 1962ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை யில், சுமார் 50 சதவிகிதம் வண்டல் மண் படர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மை காலமாக, அணையின் பெரும்பகுதி சேறும், சகதியுமாக இருப்பதால், தண்ணீரை அதி களவு தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படு கிறது. இதனை கருத்தில் கொண்டே, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே, ஆழியார் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, அணை நீர்மட்டம் சரியும் நேரத் தில், அணையின் ஒரு பகுதியில் இருந்து வண்டல் மண் எடுக்க குடி மராமரத்து திட் டத்தின் கீழ் தமிழக அரசு உத்தரவின் அடிப் படையில், ஆழியார் அணையில் இருந்து விவசாயிகள், இலவசமாக வண்டல் மண் எடுத்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, கடந்த 2023 ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் ஜூன் 8 ஆம் தேதி வரை வண்டல் மண் எடுக்க அனுமதித்திருந்தது. இதனை யடுத்து விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை லாரிகள் மூலம் எடுத்து சென்றனர். இதுவரை சுமார் 65,000 கன மீட்டர் வண்டன் மண் விவசாயிகள் எடுத்துச் சென்றதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித் தனர். இந்நிலையில், பருவ மழை குறிப் பிட்ட நாட்களில் பெய்யாததால் வண்டல் மண் எடுக்கும் பணி நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தாலும், பருவமழை எந்நேரத் திலும் பெய்யலாம் என்பதால், வெள்ளிக் கிழமை முதல் ஆழியாறு அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது.