districts

img

வேலை அட்டை இருந்தும் வேலை இல்லை

ஈரோடு, ஜுன் 6- ஜம்பை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ்  வேலைக்கான அட்டை இருந்தும் வேலை அளிக்கப்படவில்லை என  குற்றம்சாட்டி அகில இந்திய விவசாய  தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஈரோடு மாவட்டம், ஜம்பை பேரூ ராட்சியில் நகர்ப்புற வேலை உறுதி யளிப்பு திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இதற்காக தொழிலாளர்களுக்கு வேலை அட்டை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டை பெற்றவர்களுக்கு 1 முதல் 2 வாரம் வரை மட்டுமே வேலை  அளிக்கப்பட்டது. இதுகுறித்து பல முறை கேட்டும் பலனில்லை.  இந்நிலையில், அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எம்.பெருமாள் தலைமை யில் ஜம்பை பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேரூராட்சி அலுவலகத்தில் வேலை அட்டை பெற்றவர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி மனு அளித்தனர்.  இதனைப் பெற்றுக்கொண்ட செயல்  அலுவலர், ரூ.75 லட்சம் மதிப்பிலான பணிகள் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு பெறப்பட்டது. இதில் 45 விழுக்காடு பணிகள் முடிந்து விட்டது. எஞ்சிய பணி களுக்கு வேலை அட்டை பெற்றவர் களை பயன்படுத்திக் கொள்கிறேன் என் றார். அதிலும் ரூ.20 லட்சம் வரை பொருட் களுக்கு செலவாகிவிடும். எஞ்சிய ரூ.10  லட்சத்திற்கான வேலை மட்டும் அளிக்க  முடியும் என்று கூறினார். அதேசமயம்  எப்பொழுது வேலைக்கு அழைக்கப் படுவோம் என்பதை தெரிவிக்க முடி யாது என்று கூறினார். உரிய கால அவ காசத்தில் வேலை அளிக்க வேண்டும்  என விதொச சார்பில் வலியுறுத்தப் பட்டது. இதில் தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.பி.பழனிசாமி, சிஐடியு செய லாளர் ஏ.ஜெகநாதன், என்.சின்னுசாமி,  பி.சக்திவேல், பி.கோபாலகண்ணன் மற்றும் திரளான விவசாய தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.