திருப்பூர், நவ.6- திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வு பெற்ற அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்களுக்கு என்று சங்கம் அமைப்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் புதனன்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங் கத்தின் முதலாவது அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தின் மாநில பொதுச்செயலாளர் டெய்சி சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் கே.சித்ரா வாழ்த்தி பேசினார். இதை தொடர்ந்து, முன்னாள் மாநிலப் பொருளாளர் பாக்கியம், முன் னாள் மாவட்டச் செயலாளர் எல்லமாள், முன்னாள் மாவட்டப் பொருளாளர் தனலட்சுமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட புதிய அமைப்பு குழு தேர்வு செய்யப்பட்டது.