உதகை, அக்.20- குண்டும், குழியுமாக உள்ள பந்த லூர் சாலையை சீரமைக்கக்கோரி, வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட் டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூரிலுள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படு கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, பந்தலூர் பஜார் பகுதியில், சிதலமடைந்து தண்ணீர் தேங்கியுள்ள சாலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஞாயிறன்று மீன் பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்திற்கு வாலிபர் சங்க ஏரியா கமிட்டித் தலைவர் பெரியார் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் ராசி ரவிக்குமார், முன்னாள் மாவட்டச் செய லாளர் சி.மணிகண்டன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சிபிஎம் ஏரியா கமிட்டி உறுப்பினர் ஹசைன் சாஜி, வாலிபர் சங்க நிர்வாகிகள் ரஜிதா, ஷெரீஃப் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில், சிபிஎம் ஏரியா கமிட்டிச் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.