கோவை, ஆக. 14- கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கார்த்தி கேயன் ஐபிஎஸ் புதனன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கோவை மாவட்டத்தின் 43 ஆவது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளேன். மாவட் டத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்வேன். சட்டம் ஒழுங்கு சீர் குலைக்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். போக்குவரத்து விபத்து நடைபெறும் இடங்க ளில் ஆய்வு செய்து அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப் படும். மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் முன்னதாக சிசிடிவி கேமராக்கள், போலீஸ் பற்றாக்குறை போன்றவைகளை ஆய்வு செய்து பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதை தொடர்ந்து மீண்டும் மோதல் கொலை போன்ற சம்பவங்க ளில் ஈடுபடாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றார்.