நாமக்கல், நவ.14- சின்னாகவுண்டம்பாளையத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத் தாருக்கு புதிதாக கட்டப்பட்ட வீட்டும னைகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அருகே உள்ள சின்னாகவுண்டம் பாளையம் பகுதியில் கடந்த 11.08.2023 அன்று இரவு எதிர்பாரத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால், 6 வீடுகள் எரிந்து சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தீ விபத்தினால் சேத மடைந்த வீடுகளை பார்வையிட்டு தேவையான உதவிகளை செய் தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு புதிய வீடுகள் கட்டித்தரு வதாகவும் உறுதியளித்தார். அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 6 குடும்பத்தினருக்கும் புதிய வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், பணிகள் அனைத் தும் நிறைவடைந்ததையொட்டி, வீடுகள் வழங்கும் நிகழ்வு செவ்வா யன்று நடைபெற்றது. இதில், வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற் றார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ச.உமா, நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில், ஆலம்பாளையம் பேரூ ராட்சி தலைவர் சகுந்தலா, எட்டாவது வார்டு கவுன்சிலர் சதீஷ் தனகோபால் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.