பட்டமளிப்பு விழா
நாமக்கல், செப். 23- குமாரபாளையத்தில் அமைந்துள்ள எஸ்எஸ்எம் பொறி யியல் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அமைந்துள்ள எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்ட மளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முனைவர் கே.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கல்லூரி இயக்கு னர், முனைவர் பாலமோகன் அவர்கள் ஆண்டறிக் கையை வாசித்தார். கல்லூரியின் முதல்வர் எம்எஸ் மதிவாணன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தி னராக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.இ.பிர காஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதனைத்தொ டர்ந்து மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங் களையும் வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்க லைக்கழக அளவில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவர்களையும், அண்ணா பல்கலைக்கழக தரவரிசை யில் முன்னிலை பெற்ற 7 மாணவர்களை கே.இ.பிரகாஷ் எம்பி., வாழ்த்தினார்.
புதிய தொழில் முனைவோர் கடன் வசதியாக்கல் முகாம்
உதகை, செப்.23- நீலகிரியில் புதிய தொழில் முனைவோர்களுக்காக மாவட்ட அளவிலான கடன் வசதியாக்கல் முகாம் புத னன்று நடைபெற உள்ளது. புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகை யில் தமிழ்நாடு அரசு மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக செயல்படுத்தி வருகிறது. இதன்பொ ருட்டு, புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோர் களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு தேவை யான கடன் வசதியினை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் வகையிலும், மாவட்ட அளவிலான கடன் வசதியாக்கல் முகாம் ஊட்டி, சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலைத்துறை கூட்டரங்கத்தில், நாளை (புதனன்று) காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில், அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங் களின் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கிகளின் மூலம் மானியத் துடன் கூடிய கடன்கள் பெற்று தேயிலை தூள் தயாரித்தல், சாக்லெட், வர்க்கி தயாரித்தல், காரட் கழுவும் இயந்திரம், கான்கிரீட் கலவை இயந்திரம், பொறியியல் இயந்திரங்கள், ஆட்டோ மொபைல் பணிமணை, மளிகை கடை போன்ற தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாமில் சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், விவரங்கள் பெற 0423-2443947, 8925533996, 8925533997, 6379100870, 8925533995 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். தொழில் தொடங்க ஆர்வ முள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வகம் தெரிவித்துள்ளது.
மண் கடத்தல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கோவை, செப். 23- கோவையில், சட்ட விரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடவும், அங்கு உள்ள வாகனங்களை பறிமுதல் செய்திடவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கோவை மாவட்டம், பேரூர் வட்டம் ஆலந்துறை, காளி மங்கலம், தேவராயபுரம், வால்கரடு மற்றும் மதுக்கரை வட்டம் கரடிமடை ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மண் எடுத்து செங்கல் உற்பத்தி நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டு கள் எழுந்தன. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதை விசா ரித்த நீதிபதிகள் சட்ட விரோதமாக மணல் கடத்தும் நபர் களை உடனடியாக தடுத்து அவர்களை கைது செய்து, இயந்தி ரங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இடங்களில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஞாயிறன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சட்டவிரோதமாக மண் எடுப்ப தும், செங்கல் தயாரிப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடவும், மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும். உரிய அனுமதியின்றி கைகளால் செங்கல் தயாரிப்பதை தடுக்க சூளைகளுக்கு சீல் வைக்கவும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
ரயிலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை
கோவை, செப்.23- சென்னையில் இருந்து கோவைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக தவித்த இரண்டு வயது பெண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழு மூலம் அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள் ளது. கடந்த சனியன்று இரவு 11.15 மணிக்கு, சென்னை - கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புற பொது பெட்டியில் ஒரு குழந்தை தனியாக தூங்கிக் கொண்டி ருப்பதை ரயில்வே தூய்மைப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ள னர். உடனடியாக இது குறித்து கோவை ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், காவல் துறையினர் குழந்தையை மீட்டனர். பின்னர், குழந்தையின் பாதுகாப்பு கருதி குழந்தைகள் நலக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகள் நலக் குழுவினர், குழந்தையை கிணத்துக் கடவு குழந்தைகள் சரணாலயம் அன்பு இல்லத்தில் ஒப்படைத் துள்ளனர். தற்போது, குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ரயிலில் பயணித்தவர்கள் யாருக்கும் இந்த குழந்தையைப் பற்றி ஏதாவது தெரிந்தால், உடனடியாக கோவை ரயில்வே காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
காவல் உதவி ஆய்வாளர் மீது பாலியல் புகார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மனு
சேலம், செப் 23- காவல் உதவி ஆய்வாளர் மீது கல்லூரி மாணவி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ள தாக குற்ற சாட்டு தெரிவித்து, புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்களன்று புகார் அளித்தனர். சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு தன்னுடைய கணவர் தினசரி குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்து வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளார். அப்போது காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் சக்தி என்ப வர் இந்த புகார் குறித்து நடவடிக்கை மேற் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, கடந்த 5 ஆண்டு களாக உதவி ஆய்வாளர் சக்தி, அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு உதவி பரிந்து வந்துள்ளார் இந்நிலையில் தாய் வீட்டில் இல்லாத போது அப்பெண்ணின், மகள்க ளிடம், உதவி ஆய்வாளர் சக்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி அழகாபு ரம் காவல் நிலையம் மற்றும் மாநகர காவல் ஆணையாளருக்கு புகார் அளித்துள்ளார். இதன் பேரில் உதவி ஆய்வாளர் சக்தி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள் ளார். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் சக்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மாணவி மகளிர் சங்க நிர்வாகிகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் கே ராஜாத்தி ஜி கவிதா ஆகியோருடன் வந்து மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகரில் தொழில் வர்த்தக நிறுவனங்களுக்கு உரிமக் கட்டணம் நிர்ணயம்
திருப்பூர், செப். 23 - திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனங்க ளுக்கும் உரிமக் (லைசன்ஸ்) கட்டணம் நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 2500, அதிகபட்சம் ரூ 5000, சிறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ 5000, அதிகபட்சம் ரூ 7500, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 8000, அதிகபட்சம் ரூ.12000/, இதர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 12,500, அதி கபட்சம் ரூ.40,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைகள் மற் றும் வணிக நிறுவனங்களுக்கு ஆண்டு கட்டணம் குறைந்த பட்சம் ரூ.800, அதிகபட்ச ரூ.15,000 என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இது தவிர 55 வகையான வர்த்தகம் மற்றும் வணிக நிறு வனங்களுக்கும், 157 வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் சிறு, நடுத்தர மற்றும் இதர பெரியவை என்ற அடிப்படையில் மூன்று வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு விடுதி, கேண்டீன், ரெஸ்டாரன்ட், ஹாஸ்டல்கள், தங்கும் விடுதிகள், மண்டபங்கள், மேன்சன், விருந்தினர் இல்லம், பொதுக் கூட்டங்கள், விழா கொண்டாட்டம், பொது பயன்பாட்டிற்காக விடப்படுகின்ற திருமண மண்டபம் விருந்து மண்டபம் போன்ற கட்டிடங் களுக்கும், தனியார் வாகனம் நிறுத்துமிடம், தனியார் அறுவை கூடம் ஆகிய கட்டிடங்களுக்கும் உரிமக் கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இந்த வகை இனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஓராண்டு கட்டணத்தை கணக்கிட்டு மூன்றாண்டுகளுக்கு உரிய கட்டணத்தை வசூல் செய்து மூன்றாண்டு காலத்திற் கான உரிமம் வழங்கிட வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
பெயர் பதிவுடன் பிறப்புச்சான்றிதழ் பெற கால அவகாசம்
திருப்பூர், செப். 23 - தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டப்படி பிறந்த 15 ஆண்டுகளுக்குள் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்வது கட்டாயம் இதன்படி 2000 ஆண்டிற்கு முன்பு நிகழ்ந்த பிறப்பு களுக்கு பெயர் பதிவு செய்ய முதல் கட்டமாக 15 ஆண்டுகள் அதாவது 2014 டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட் டது. இந்த பெயர் பதிவிற்கான கால அவகாசம் மேலும் இரு முறை ஐந்தைந்து ஆண்டுகளாக 10 ஆண்டுகளுக்கு அதாவது 2024 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அனைவரும் உரிய விதிமுறைகளின்படி குழந்தையின் பிறப்பு சான்றிதழை பதிவு செய்யலாம்.எனவே திருப்பூர் மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழ் குழந்தையின் பெயர் பதிவு செய்யாதவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக் குள் உரிய பிறப்பு இறப்பு பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள் ளுமாறு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறியிருக்கி றார்.
ரூ.35.84 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, செப்.23 – சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 170 விவசாயிகள் கலந்து கொண்டு 1280 மூட் டைகள் நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டுவந்திருந்த னர். திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் 6 பேர் கலந்து கொண்டு மறைமுக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,810 முதல் ரூ.7,610 வரை யிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,250 முதல் ரூ.6,800 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.5,600 முதல் ரூ.6,200 ஏலம் போனது. மொத்தம் ரூ.35.84 இலட்சத்திற்கு ஏலம் நடை பெற்றது.
கூடலூர் மக்களை மனிதர்கள் பட்டியலில் சேர்த்திடுக உதகை ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் மனு
உதகை, செப்.23- யானைகள் வழித்தடம், புலிகள் காப்பகம் என்கிற பெயரால், கூடலூர் பகுதி மக்களை வெளியேற்றும் முயற்சியை கைவிட்டு, கூடலூர் மக் களை மனிதர்கள் பட்டியலில் சேர்த்து பாதுகாக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் உள் ளிட்ட அனைத்து கட்சியினர் திங்க ளன்று மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆட்சி யர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், ஆட்சியர் லட் சுமி பவ்யாவிடம், அனைத்து கட்சியி னர் அளித்த மனு அளித்தனர். இத னைத்தொடர்ந்து அவர்கள் கூறுகை யில், கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் மக்கள் வசிப்பிடங்கள், கடைவீதிகள், விவசாய நிலங்கள் என அனைத்து இடங்களிலும் காட்டு யானைகள் உலா வருவது அதிக ரித்து வருகிறது. இதனால் ஒவ் வொரு நாளும் பொதுமக்கள் உயிர் பயத்துடன் வாழ வேண்டிய அவல் நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுக ளில் 220 பேர் காட்டு யானைகள் தாக்கி இறந்துள்ளனர். இதனால் அவர்களு டைய குடும்பம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இதேபோல் கூடலூர் மக்கள் வசிப்பிடங்கள் மீது வனத்துறை பல் வேறு அடக்குமுறைகளை நடை முறைப்படுத்துகிறது. சாமானிய மக் களின் அடிப்படை தேவைகளான மின் இணைப்பு, கதவு எண், நிலம் வாங்க, விற்க, சாலைகள், நடை பாதை உள்ளிட்ட அடிப்படை தேவை கள் முடக்கப்பட்டு உள்ளது. ஓவேலி மக்கள் மீது தொடர்ச்சி யாக வனத்துறை அடக்குமுறை செலுத்துவதால் கூடலூர் மக்களை விலங்குகளுக்கும் கீழாக நடத்தும் அவல நிலை உள்ளது. எனவே கூட லூர் மக்களை மனிதர்கள் பட்டிய லில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகள் வழித்தடம், புலிகள் காப்பகம் என்கிற பெயரால், இங்குள்ள மனிதர்களை விரட்டும் போக்கினை வனத்துறையினர் கைவிட வேண்டும். கூடலூர் மக்க ளுக்கு நில உரிமையை உறுதி செய்ய வேண்டும். காட்டு யானைகள் பிரச் சனைக்கு நிரந்தர தீர்வு இருக்க வேண் டும் என தெரிவித்தனர். முன்னதாக இந்த மனு அளிக் கும் இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் என்.வாசு, திமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்தி ரன், விசிக சகாதேவன் மற்றும் காங்கி ரஸ், முஸ்லீம் லீக், உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இதில் பங்கேற் றனர்.
பேருந்து மோதி விபத்து - இருவர் பலி
ஈரோடு, செப். 23- கோபி அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியிலிருந்து கோபி நோக்கி வந்த தனியார் பேருந்து புதுவள்ளியம்பாளையம் பகுதியில் வந் தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்த விவசாயி சண்முகத்தின் மீது மோதியது. இதில், பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது படியில் பயனம் செய்த ஏரங்காட்டூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார். பேருந்தின் பின் சக்கரத் தில் சிக்கி நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலை யில் இருந்த விவசாயி சண்முகத்தை அக்கம் பக்கதினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப் போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யிலே சண்முகம் உயிரிழந்தார். பேருந்தில் அளவுக்கு அதிக மான பயணிகளுடன் இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டு னர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலிருந்து தலைமறை வாயினார். இதுகுறித்து கடத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.