districts

img

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, ரூ.22.20 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் தீவிரம்!

மேட்டுப்பாளையம், ஜூலை 27- மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு புதிதாக ரூ.22 கோடியே  20 லட்சம் செலவில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் சுமார் 20 ஆயிரம் குடும் பங்களுக்கு பவானியாற்றில் இருந்து ஒரு கோடியே 20  லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, சுத்தீகரிக்கப்பட்டு குடிநீ ராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற் போது தண்ணீர் எடுத்து வரும் இடத்தில் நகரில் இருந்து வெளி யேறும் கழிவுகள் மற்றும் ஆலைக்கழிவுகள் கலப்பதால் குடி நீர் சுகாதாரமானதாக இல்லை என்ற புகார் எழுந்தது. இதனால்  பழைய நீரேற்று நிலையத்தை இடம் மாற்ற வேண்டும்  என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.  இதனையடுத்து கழிவுகள் ஏதும் கலக்காமல் பவானி ஆற்று நீர் தூய்மையாக வரும் விளாமரத்தூர் என்னுமிடத்தில் தண் ணீர் எடுக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு நகர்மன்ற கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு அனுமதியளித்த தமிழக அரசு இதற்காக ரூ.22.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலை யில், புதிய குடிநீர் திட்டப்பணிகள் கடந்த ஏழு மாதங்க ளுக்கு முன்பு துவக்கப்பட்டு, தற்போது விளாமரத்தூர் பகு தியில் பவானியாற்றில் கிணறு மற்றும் புதிய நீரேற்று நிலை யம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. இதனிடையே, இதற்கான குடிநீர் குழாய்களை வனபத் திரகாளியம்மன் கோவிலில் இருந்து மேட்டுப்பாளையம் நகர  பகுதிக்கு செல்லும் சாலையோரம் பதிக்க நெடுஞ்சாலைத் துறை பல மாதங்கள் அனுமதி வழங்காமல் இருந்தது. இச் சாலை புதிதாக சீரமைத்து மூன்று மாதங்களே ஆன நிலை யில் குழாய் பதிப்பு பணிக்காக மீண்டும் சாலையை தோண்ட  நெடுஞ்சாலைத்துறை அனுமதியளிக்க மறுத்தது. இதனால்  புதிய குடிநீர் திட்டப்பணிகள் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டு  வேலை பாதிக்கப்பட்டது. இது சுமார் 80 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்து, குழாய் பதிப்பு பணிகள் பாக்கியிருந்த நிலை யில், அதிகாரிகளின் இரண்டு கட்ட பேச்சு வார்த்தைக்கு தற் போது அதற்கு நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கி யுள்ளது. இதனையடுத்து புதிய நீரேற்று நிலைய திட்டப் பணி கள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இங்கு எடுக் கப்படும் ஆற்றுநீர் நகரப் பகுதியில் உள்ள சாமண்ணா  சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திக ரித்து குடிநீராக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள் ளது.