மாற்றுத்திறனாளிகள் சங்க புதிய கிளை அமைப்பு
சேலம், ஜூன் 17- சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வளையம்மாதேவி ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, ஊரக வேலை வாய்ப்பு ஏஓய்ஓய் குடும்ப அட்டையாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், கிளை நிர்வாகிகள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பி னர்கள் பங்கேற்றனர். இதில், மாவட்ட செயலாளர் குண சேகரன், மாவட்ட துணை செயலாளர் கந்தன், சிபிஎம் ஆத்தூர் தாலுகா செயலாளர் முருகேசன், ஆத்தூர் வட்ட தலைவர் காங்குடையன், ஆத்தூர் வட்ட செயலாளர் ஆழகுவேல் உள் ளிட்டோர் பங்கேற்று உரையாறறினர்.
முன்னாள் டிஜிபி மகன் மீது வழக்குப்பதிவு
சேலம், ஜூன் 17- முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் கொடுத்த புகாரின் பேரில், அவரின் மகன் மற்றும் தோழி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். சேலம் வழக்கறிஞர் சுருதி, சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்தாண்டு (2022) செப்டம்பர் மாதம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், எனக்கும், முன்னாள் டிஜிபி மகனான பிரபு திலக் என்பவருக்கும், 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது, என் தந்தை, வரதட்ச ணையாக ஒரு கோடி ரூபாய் ரொக்கமும், 170 பவுன் நகையும் வழங்கினார். சமீபகாலமாக என் கணவர், எவ்வித காரண மின்றி அடிப்பதும், துன்புறுத்துவதுமாய் இருந்து வருகிறார். மேலும், வரதட்சணை கேட்டு அடித்து விரட்டுகிறார். தன்னுடன் பணியாற்றும் பெண் மருத்துவர் இந்திரா பிரிய தர்ஷினி என்பவருடன், அவர் திருமணத்தை மீறிய உறவில் உள்ளார். இதுகுறித்து எனக்குத் தெரியவந்த உடனே கேட்ட தற்கு, கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் என் உயிருக்கு ஆபத்து இருந்து வருகிறது. எனவே, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந் தார். ஆனால் இந்த புகாரின் பேரில், சேலம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள தனி யார் உணவகம் ஒன்றில் கடந்த ஆண்டு (25.10.2022) பிரபு திலக் மற்றும் அவரின் தோழி இந்திரா பிரியதர்ஷினி இருவரும் இருந்ததை கண்ட வழக்கறிஞர் சுருதி, கணவரிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, இருவரும் சேர்ந்து சுருதியையும், அவரின் பெற்றோரையும் தாக்கி உள்ளனர். இது தொடர்பாக வழக்கறிஞர் சுருதி, திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்காத காரணத்தால், சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை சுருதி நாடினார். இதனையடுத்து, சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய வி5 திருமங்கலம் போலீ சாருக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று போலீசார் குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக் மற்றும் மகனின் தோழி மருத்துவர் பிரிய தர்ஷினி ஆகிய இருவரும் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
விசாரணை இன்றி வழக்குப்பதிவு: காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருப்பூர், ஜூன் 17- ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலை வர் மீது முறையான விசாரணை இன்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனியன்று மனு அளிக்கப் பட்டுள்ளது. பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிர மணியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட் சியில் குடியிருக்கும் செல்வகுமார் என்பவர் வீட்டிலிருந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. மேலும் தேங்கிக் கிடந்த கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அப்ப குதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், ஊராட்சி மன்றத்திற்கும், சுகாதா ரத்துறைக்கும் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, மனு சம்பந்தமாக விசாரணை செய்து, தற்காலிகமாக அமைக்கப் பட்ட கால்வாயை மூட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலு வலர் மற்றும் பொங்கலூர் ஊராட்சி செயலர் சம்பவ இடத் திற்கு நேரில் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாயை மூடி சென்றனர். இதையடுத்து செல்வக்குமாரும் அவர் குடும் பத்தினரும் ஜேசிபி இயந்திரத்தை வழிமறித்து ஏன் கால் வாயை மூடினீர்கள் என தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் இல்லாத மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையான விசாரணை இன்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதி காரிகள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும், மேலும் இதுபோன்று அரசுத்துறை அதிகாரி கள் மீது எவ்வித விசாரணையும் இன்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை கைவிட வேண்டும் என கூறப்பட் டுள்ளது. வழக்கு பதிவு செய்ய காரணமான செல்வகுமார் பாஜகவை சேர்ந்தவர் என்பது கவனிக்கதக்கது.
காங்கேயம் மாட்டுச்சந்தை நாளை தொடக்கம்
திருப்பூர், ஜூன் 17 - பாரம்பரியம் மிக்க காங்கேயம் மாட்டுச் சந்தை காங் கேயம் நகரில் திங்களன்று (நாளை) தொடங்கி வைக்கப்பட உள் ளது. காங்கேயம் நகராட்சி தாராபுரம் மெயின்ரோடு, கவி ரெஸ்டாரண்ட் அருகில் திங்களன்று மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் இந்த சந்தையைத் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இந்த மட்டுச் சந்தை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
பருத்தி ஏலம்
தாராபுரம், ஜூன் 17 - திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற் றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங் களை சேர்ந்த 832 விவசாயி கள் பருத்தியை விற்பனைக் காக கொண்டு வந்திருந் தனர். இதில், அதிக பட்ச விலையாக குவிண் டால் ஒன்றிற்கு ரூ. 7 ஆயி ரத்து 469க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 5 ஆயிரத்து 800 க்கும் சராசரி விலையாக ரூ. 6 ஆயிரத்து 700க்கும் விலை போனது. மொத்தம் 8380 மூட்டைகள் 2 ஆயி ரத்து 588 குவிண்டால் பருத்தி ரூ. 1 கோடியே 71 லட்சத்து 78 ஆயிரத்து 70க்கு விற்ப னையானது.
பேருந்தில் பயணித்த பனியன் தொழிலாளி மாரடைப்பில் மரணம்
திருப்பூர், ஜூன் 17 - திருப்பூரில் அரசு பேருந்தில் பய ணித்த பனியன் தொழிலாளி மாரடைப்பு ஏற்பட்டு அமர்ந்த நிலையிலேயே உயிரி ழந்தார். திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூர், பாரதி வீதியை சேர்ந்தவர் அசோக்குமார். திருமணம் ஆகாதவர். இவர் தினமும் அனுப்பர்பாளையம் பகுதியில் இருந்து முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள பனியன் நிறு வனத்திற்கு பேருந்தில் சென்று வருவது வழக்கம். சனியன்று காலை வழக்கம் போல் அனுப்பர்பாளையம் புதூரில் அரசு பேருந்தில் ஏறி பயணித்தார். சிறிது நேரத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்தில் அமர்ந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும் அருகில் இருந்த யாருக்கும் அவர் இறந்தது தெரியவில்லை. இவர் பயணித்த பேருந்து கலைஞர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது அசோக்கு மார் இருக்கையில் அமர்ந்த நிலையில் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. சக பயணிகள் இது குறித்து நடத்துநர் மூலம் காவல் துறையினருக்குத் தக வல் கொடுத்தனர். பேருந்து நிலையத் திற்கு வந்த காவலர்கள், அசோக்குமா ரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேட்டூரில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி
சேலம், ஜூன் 17- மேட்டூரில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடை பெற்றது. இதனை மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திர சேகரன் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம், மேட்டூர் சதுரங்காடியில் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் மற்றும் சேலம் மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களை சேர்ந்த 300 - கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். எடை அளவை கொண்டு ஆண்களுக்கு 20 பிரிவுகள், பெண்களுக்கு 10 பிரிவுகள் என மொத்தம் 30 பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது. சனியன்று நடைபெற்ற போட்டியை மாநிலங்களவை உறுப் பினர் என்.சந்திரசேகரன் துவக்கி வைத்தார். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள், தங்க நாணயம், உள்ளிட்ட பரிசு பொருட் கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக, போட்டியில் பங்கேற்க வந்த வீரர்கள் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று மைதானத்தை வந்தடைந் தனர்.
மாணவி பாலியல் வன்செயல்: ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை
சேலம், ஜூன் 17- சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தைச் சேர்ந்தவர் காங்க முத்து. இவர் அப்பகுதியில் உள்ள தனி யார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணி யாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டதோடு, பாலியல் வன் செய லில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2020ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி காங்கமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த தையடுத்து, பள்ளி மாணவியை ஏமாற்றி அவரை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த குற்றத்திற்காக காங்கமுத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ 12 ஆயிரம் அபராதம் விதித்தும் சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார். இதை யடுத்து காங்கமுத்து சிறையில் அடைக்கப் பட்டார்.