districts

img

முருகப்பெருமானோ, சிக்கந்தர் தர்ஹாவோ சம்பந்தப்பட்டது அல்ல,  முழுக்க முழுக்க பாஜகவின் வெறுப்பு அரசியலே!

மதுரை, பிப்.7- திருப்பரங்குன்றத்தை மையப் படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப்பெருமான் சம்பந்தப்பட்ட தோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப் பட்டதோ அல்ல, முழுக்க முழுக்க  பாஜக-வின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.,வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற கடுமையாக முயற்சி செய்து வருகின்றன.1990-களில் இராமகோபாலன் வகை யறாக்கள் முயற்சி செய்து தோல்வி யடைந்ததை இப்பொழுது ஹெச். ராஜா, அண்ணாமலை வகைய றாக்கள் கையிலெடுத்துள்ளனர்.  திருப்பரங்குன்றம் மலை மீது இந்து அறநிலையத்துறைக்கான உரிமை என்ன, சிக்கந்தர் தர்கா வுக்கான உரிமை என்ன என்பது குறித்து, பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தீர்ப்பு வழங்கி உறுதிப்படுத்தியுள்ளன.  மதவெறியை கிளப்பிவிடும் ஆர்எஸ்எஸ்- பாஜக  திருப்பரங்குன்றத்து மக்களா லோ, அல்லது சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தாலோ அல்லது தர்கா நிர்வாகத்தாலோ உரிமை சம்பந்தமான பிரச்சனை எதுவும் இப்போது எழுப்பப்படவில்லை. பின்னர் பிரச்சனையை எழுப்பு வது யார்? ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் அமைப்புகள்தான், ஒன்றாகவும் நன்றாகவும் இருக் கும் ஊரில் மதவெறியை கிளப்பி விட்டு தங்களின் வாக்கு வங்கியை பலப்படுத்த இதுவொன்றே வழி என்று இறங்கியுள்ளன. அயோத்தி துவங்கி சம்பல் வரை அரங்கேற்றிய நிகழ்ச்சி நிரலை இங்கும்  அரங்கேற்ற முயல்கின்றனர். இவர்கள் தங்க ளின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற் றிய இந்த இடங்களில் எல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதி மன்றங்கள், இவர்களின் செயல் திட்ட நிறைவேற்றத்தின் பகுதியாக இருந்துள்ளன என்பது கசப்பான உண்மை.  திருப்பரங்குன்றத்திலும் அச்சு  அசலாக அதே மாதிரியை இவர்க ளால் அரங்கேற்ற முடிகிறது என் றால் மாவட்ட நிர்வாகம் மொத்த மாக தோல்வி அடைந்துள்ளது என்பதே பொருள். திடீரென இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்க ளில் ஒன்றாக, மாவட்ட நிர்வா கத்தின் அணுகுமுறை இருக்கி றது.  வழிபாட்டு உரிமையில் காவல்துறை தலையிட்டது ஏன்? இங்கு வழிபாடு சார்ந்த உரிமை பிரச்சனை எழுப்பப் பட்டது என்று பொத்தாம் பொது வாக சொல்கிறார்கள். இந்த பிரச்சனையை எழுப்பியது யார்? தர்காவில் கந்தூரி வழிபாட்டு உரிமையில் எந்த அடிப்படையில் காவல்துறை தலையிட்டது. காவல் துறைக்கு புகார் கொடுத்தது யார்? வருவாய்த்துறை எந்த அடிப்ப டையில் இதில் தலையிட்டது போன்ற கேள்விகளுக்கான பதில் கள் எல்லாம் இந்துத்துவா அமைப்பினரின் நுண் திட்டங்க ளுக்குள் பொதிந்து கிடக்கிறது.  திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்று அவர்க ளாகவே கேள்வி எழுப்பி, போலி வாட்ஸ் அப் செய்திகளை உரு வாக்கி, பொது சமூகத்தில் பரப்பிய வர்கள் குறித்து துளி அளவாவது அக்கறை கொண்டு காவல்துறை தலையீடு செய்ததா? வெறுப்பு பிரச்சாரம் தங்கு தடையின்றி பரப்பப்படும் போது ஒரு நட வடிக்கைக்கூட காவல்துறை யிடமிருந்து இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.  ஜனவரி 27 ஆம் தேதி திருப்ப ரங்குன்றத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, தெமு திக, விசிக, மநீமை, மமக, ஐயூ எம்எல் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் இது வரை இருந்து வந்துள்ள வழிபாட்டு மரபுகள் என்ன என்பதையும், அதில் தலை யீடு செய்து பிரச்சனையை உரு வாக்கி மக்கள் ஒற்றுமையை கெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் ஆணை யருக்கும் மனு அளித்துள்ளனர். மக்கள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பவர்களை தனிமைப் படுத்தக் கோரும் மிக முக்கிய நடவடிக்கை இது. அரசியல் கட்சிகள் மிகுந்த பொறுப்பு ணர்வோடு இந்த பணியை செய்தன.  இந்த கட்சிகளை சார்ந்தவர்கள் மட்டுந்தான், இதற்கு முன் இந்த ஊரில் இருந்தார்களா? மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையில் அயல்நாட்டிலிருந்து ஜனவரி மாதம் தான் திருப்பரங்குன்றத்தில் நுழைந்துள்ளார்களா? கால காலமாக இருந்து வரும் வழி பாட்டு மரபுகள் பற்றி எதுவும் தெரி யாதது போல, கட்சிகள் சொல்வ தை எழுதி வாங்கி, நாங்கள் நீதிமன்றத்தில் தருகிறோம் என்று சொல்வது மட்டும்தான் மாவட்ட நிர்வாகத்தின் பணியா?  மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனமான அணுகுமுறை  மதவெறியர்களை தனிமைப் படுத்த வேண்டிய ஒரு பிரச்சனை யில் மாவட்ட நிர்வாகம் மெத்த னமான அணுகுமுறையோடு செயல்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு நிறைவேற்றப்பட்ட முறை யும்,  நீதிமன்றத்தில் அரசு வழக்க றிஞர்கள் வாதிட்ட முறையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதற்கு யார் பொ றுப்பேற்பது என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும்.  திருப்பரங்குன்றத்தை மையப் படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப்பெருமான் சம்பந்தப்பட்ட தோ, மலை சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல, முழுக்க முழுக்க பாஜக -வின் வெறுப்பு அரசியல் சம்பந்தப் பட்டது.  விஷம் கக்கிய ஹெச்.ராஜா  அக்கட்சியின் தலைவர் ஹெச். ராஜா, திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றும், அயோத்தி போல முதல் யுத்தம் திருப்பரங்குன்றத்தில் துவங்கிவிட்டது என்றும் பழங்கா நத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் விஷம் கக்கியுள்ளார்.  எந்த அயோத்தியை தங்கள் அரசியலின் அடிப்படையாக்கி னார்களோ அதே அயோத்தியில் இந்த மக்களவை தேர்தலில் தோற்கடித்து விரட்டப்பட்டார்கள்.   மதவெறியை தனிமைப் படுத்தும் ஆன்மீக பலமும், பாசி சத்தை எதிர்கொண்டு வீழ்த்தும் மதச்சார்பற்ற அரசியலின் தனித்து வமிக்க பலமும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.  ஹெச் ராஜாவின் மத வெறி கணக்குகளை தவிடுபொடி யாக்கும் வலிமை குன்றத்திற்கு உண்டு. தீய நோக்கங்களுக்காக இறை வனின் பெயரை பயன்படுத்துப வனே ஆன்மீகத்தின் முதல் எதிரி என்பதை நன்கு அறிந்த திருப்ப ரங்குன்றத்து மக்களும், தமிழ கத்து மக்களும் பாஜக-வின் வெறுப்பு அரசியலை முறியடித்து காட்டுவார்கள். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.