districts

img

தேசிய அளவில் சேலம் முதலிடம்: நாமக்கல் 4 ஆம் இடம்

நாமக்கல், ஜூன் 14- ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதலிடமும்,  நாமக்கல் மாவட்டம் 4 ஆம் இடம் பிடித்த நிலையில், அதற்கான விருதினை மாவட்ட ஆட்சியர்களிடம், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா வழங்கினார்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் சிறப் பாக செயல்படுத்தமைக்காக தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதலிடமும், நாமக்கல் மாவட்டம் 4 ஆம் இடமும் பிடித்தது. இந்நிலையில், சென்னை  தலைமை செயலகத்தில் வியாழனன்று  நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுட னான ஆய்வுக்கூட்டத்தில், இதற்கான விருதினை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சேலம் ஆட்சியர் ரா.பிருந்தா தேவி மற்றும் நாமக்கல் ஆட்சியர் ச. உமா ஆகியோரிடம் வழங்கினார்.  

கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் ஊரக குடிநீர் இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் திட்டத் தில் 1,419 எண்ணிக்கையிலான பணிகள்  மூலம் ரூ.149.92 கோடி செலவினம் மேற் கொண்டு 1,76,808 இல்லங்களுக்கு தனித்தனி குடிநீர் இணைப்புகள் வழங் கப்பட்டுள்ளன. அக்டோபர் 2022 முதல்  ஜூன் 2023 வரையிலான காலத்தில், ஜல்  ஜீவன் மிஷன் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி தேசிய அளவில் முதலி டம் பெற்றமைக்காக ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் ‘ஜல் ஜீவன் சர்வேக்ஷான்’ பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நாமக்கல் மாவட்டத் தில் உள்ள 15 ஒன்றியங்களில் 322  ஊராட்சிகளுக்குட்பட்ட 2,520 குக்கிரா மங்களுக்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்த 14 மற்றும் 15  ஆவது நிதிக்குழு ஆகிய திட்டங்களின் மூலம் மொத்தமுள்ள 3,52,086 வீடுக ளில் இதுவரை 3,47,996 (98.84 சதவிகி தம்) வீடுகளுக்கு தனி நபர் இல்ல குடி நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 4,090 வீடுகளுக்கும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் குடிநீர் இணைப்பு கள் வழங்கப்படும். தனி நபருக்கு நாள்  ஒன்றுக்கு 55 லிட்டர் குடிநீர் (55 LPCD)  என்ற அளவில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு மூலம் பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில்  98 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கள் மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்குழு திட்டத்தில் 418 புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் கட்டுவதற்கான பணி கள் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 441 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணிகள் முடிவுற்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் பட்டுள்ளது என ஆட்சியர் உமா தெரி வித்துள்ளார்.