districts

img

நவீன காலத்தில் மொழிகள், இலக்கியங்கள் தருமபுரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

தருமபுரி, அக்.21- தருமபுரி அரசு கலைக் கல்லூரி மற்றும்  முதுகலை ஆங்கில இலக்கிய துறையின் சார்பாக நவீன காலத்தில் டிஜிட்டல் தரைவிரிப்பு: மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வர் முனைவர் ஜி.கண்ணன் தலைமை வகித் தார். ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் தேன்மொழி வரவேற்றார்.  இந்நிகழ்வில் பேராசிரியர் சி.ராஜேந் திரன்,  கூட்டுறவுத் துறை, பேராசிரியர் முனைவர்.விஜயா தாமோதிரன், தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் ஆர்.சங்கர், தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  முன்னதாக மாநாட்டின் முதல் அமர்வில், ‘மொழி மற்றும் இலக்கியத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்’ என்ற தலைப் பில் முனைவர் ஏ.எட்வின் ஜீவராஜ், இரண்டாவது அமர்வில், ‘கலாச்சாரத்தில் டிஜிட்டல் ‘ என்ற தலைப்பில் முனைவர் வி.அன்பரசி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் பல்வேறு கல்லூரிகள், பல் கலைக்கழகங்களிலிருந்தும் ஆராய்ச்சி யாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து, கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். நிறைவாக மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.