கோவை, ஏப்.17- கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள சக்தி சுகர்ஸ் அலுவலகத்தில் சனியன்று தமிழ்நாடு சதுரங்க விளையாட்டு அமைப்பின் தலைவர் மாணிக்கம் மற்றும் போட்டி ஒருங்கி ணைப்பாளர் அனந்தராமன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, சக்தி குழும நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் நா.மகாலிங் கத்தின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியும், கோவை மாவட்ட சதுரங்க சங்க மும், இணைந்து தேசிய அளவிலான 18 வயதுக்குட்பட்டோ ருக்கான எம்பிஎல், சதுரங்க சாம்பியன் போட்டியை நடத்து கிறது. வரும் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை பொள்ளாச்சி மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரியில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலும் 22 மாநி லங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என 235 போட்டியா ளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 90 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 70 ஆயிரம் ரூபாயும், வழங்கப்பட உள்ளது. மொத்தமாக ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் சிறப்பாக விளையாடும் 3 வீரர், வீராங்கனைகளுக்கு கோப் பைகள், வழங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் உலக 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்கள் என தெரிவித்தனர்.