districts

img

செப் 19 முதல் 21 வரை நாமக்கல்லில் ஆதிவாசிகள் உரிமைகளுக்கான தேசிய மாநாடு

நாமக்கல், ஜூலை 29- ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4 ஆவது அகில  இந்திய மாநாடு நாமக்கல்லில் நடைபெற உள்ளது. இதற்கான 151 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பு நான்காவது அகில இந்திய மாநாடு வரும் 2023  செப்டம்பர் 19, 20, 21 ஆகிய தேதி களில் 3 நாட்கள் நாமக்கல்லில்  நடைபெறுகிறது. இதற்கான வர வேற்புக்குழு அமைப்புக்கூட்டம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின், நாமக்கல் மாவட்டக் குழு சார்பில், சிபிஎம் அலுவல கத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு அகில  இந்திய விவசாயிகள் சங்கத்தின்  முன்னாள் மத்திய குழு உறுப்பினர்.   ஏ.ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புக்குழு செய லாளர்  என்.வேலுசாமி வரவேற்று பேசினார். இதில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் என்.பாண்டி, மலைவாழ்  மக்கள் சங்கத்தின் மாநிலத் தலை வர்  டி.டெல்லி பாபு, மாநில பொதுச்  செயலாளர் இரா.சரவணன், மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி, தமிழக விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பி.பெரு மாள், தமிழ்நாடு மலைவாழ்  மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி.தங்கராஜ்  உள்ளிட்டோர் பங் கேற்று மாநாட்டின் முக்கித்துவம் குறித்து உரையாற்றினர்.

முன்னதாக, மாநாட்டுக் குழு வின் வரவேற்பு குழுத்தலைவராக மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.டெல்லி பாபு,  செயலாளராக தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் நாமக்கல் மாவட்டக்குழு செயலாளர் பி. பெருமாள், வரவேற்புக்குழு பொருளாளராக இந்திய மாணவர்  சங்க முன்னாள் மாநிலத் தலைவர்  ஏ.டி.கண்ணன் மற்றும்  விவசாயி கள் சங்க முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி உள்ளிட்ட 40 துணை தலைவர்கள், 40  துணைச் செயலாளர்கள் உள் ளிட்ட 151 பேர் கொண்ட மாநாட்டு  வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ஆதிவாசிகள் உரிமைகளுக்கான தேசிய மாநாடு செப்டம்பர் மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள்  நடைபெறுகிறது. இம்மாநாட்டில்,  நாடு முழுவதிலும் இருந்து 18- மாநிலங்களைச் சேர்ந்த மலை வாழ் மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் அகில இந்திய தலைவர்களும், குறிப் பாக கேரளா மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.  தற்போது ஒன்றியத்தில் அதி காரத்தில் இருக்கும் பாஜக அரசு,  மலைவாழ் மக்களுக்கும், விவ சாயிகளுக்கும் எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், மலைவாழ்  இன மக்கள் சான்றிதழ்  வழங்குவதில் உள்ள குளறுபடி கள், அகில இந்திய அளவில், மலை வாழ் மக்களுக்கு எதிராக இருக் கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு  காணும் வகையில், பல்வேறு தீர் மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்ற உள்ளது என்றார்.  முன்னதாக, மாநாட்டு பணி களை விரைவு படுத்துவதற்கான வரவேற்புக்குழு அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் திறந்து வைத்தார். முடிவில், தமிழ் நாடு மலைவாழ்  மக்கள் மாவட்ட செயலாளர் கே.சின்னசாமி நன்றி கூறினார்.