districts

img

பாஜக கூட்டணி வீழ்ச்சியடையும் பீதியில் நரேந்திர மோடி - அ.சவுந்தரராசன் நம்பிக்கை

தருமபுரி, மார்ச் 18- பாஜக ஆட்சியில் மக்கள் சொல் லென்னா துயரத்திற்கு ஆளாகி யுள்ளனர். தென்னிந்தியா, வட இந்தியா அனைத்திலும் பாஜக கூட்டணி படு தோல்வி அடையும், எனவே நரேந்திர மோடி பீதியில் இருப்பதாக சிஐடியு மாநில தலை வர் அ.சவுந்திராசன் தெரிவித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேர்தல் நிதியளிப்பு சிறப்பு பேரவை கூட்டம் தருமபுரி சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகரா சன் தலைமை வகித்தார். இதில்  தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டு, சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் பேசுகையில், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களில் பாஜக கூட்டணி வீழ்ச்சியடையும் பீதியில்  மோடி இருக்கிறார். ராமர் கோவில்  கட்டியதன் மூலம் இந்தியா முழுவ தும் மத உணர்வு உள்ளவர்களிடம் வாக்கு வாங்கிவிடலாம் என பாஜக நினைக்கிறது. சன்யாசிகள் மாநாட்டில் ஒரு லட்சம் இஸ்லாமி யர்களை கொன்றால் புன்னியம் கிடைக்கும் என பேசுகின்றனர். இன அழிப்பு தான் பாசிசத்தின் அடிப்படை. குறிப்பாக கம்யூ னிஸ்ட், கிறிஸ்துவர், இஸ்லாமியர் களை அழிக்க வேண்டும் என பாஜக துடிக்கிறது. பாஜக ரூ. 11  ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்தி ரத்தின் மூலம் பெற்றுள்ளது. இது ஊழலுக்கு வழிவகுக்கும் என கம்யூனிஸ்ட்கள் கூறுகின்றனர். இதனால் தான் கம்யூனிஸ்ட்களை அழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர்  ஏகபோக தடைச்சட்டம், முக்கிய மான சட்டமாக இருந்தது. அப்போ தெல்லாம் பொருட்களின் விலையை அரசுதான் நிர்ணயம் செய்யும். கடந்த 10 ஆண்டுகளில், முதலாளிகளே நிர்ணயம் செய்கின் றனர். அத்தியாவசிய பொருட்கள்  விலை ஏற்றத்தால் ஏழைகள் மேலும்  ஏழைகளாக மாறிக்கொண்டிக்கின் றனர். கொரோனா காலத்தில் பல் வேறு தொழிற்சாலைகள் மூடப்பட் டன. பல்லடம், திருப்பூர், ராசிபுரம் போன்ற இடங்களில் ஜவுளி தொழில் நலிவடைந்து வருகிறது. விசைத்தறி இயந்திரங்களை இரும்பு கடைக்கு விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிரந்தர வேலை என்பது ஒழிக்கப் பட்டு வருகிறது. திருப்பூரில் சிறு  முதலாளிகள் தங்களது நிறுவனங் களை மூடிவிட்டு தொழிலாளிக ளாக மாறிவிட்டனர். ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் தந்தால் இலவ சம், முதலாளிகளுக்கு வரிதள்ளு படி செய்தால் ஊக்கத்தொக்க என்று பாஜக சொல்கிறது. ஏழை மக்களின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதியை குறைக்கிறது. இதை  எதிர்த்து போராடுகின்ற அமைப்பை ஒழிக்கின்றனர். பெண்களை அடிமையாக இருக்க வைப்பதுதான் சனாத னம். அதனால் தான் மணிப்பூர்  பழங்குடி பெண்கள் பாலியல்  வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டுள்ளனர். சனாதனத்தை தூக்கிப்பி டிக்கின்ற ஆர்எஸ்எஸ் – பாஜ கவை நடைபெற உள்ள தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றார்.  இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்டச்  செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு  உறுப்பினர் இரா.சிசுபாலன் உட்பட  திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில், நகரச் செயலாளர் சி. முரளி நன்றி கூறினார்.