கோவை, பிப்.8- கோவையில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் நரவேட்டை, மரிச்ஜாப்பி, இந்தி யாவை உலுக்கிய வைக்கம் ஆகிய மூன்று நூல்கள் அறிமுகப்படுத் தப்பட்டது. கோவை – அவினாசி சாலை யில் அமைந்துள்ள அர்த்ரா ஹாலில் நடைபெற்ற புத்தக அறிமுக நிகழ்விற்கு ததீஒமு மாவட்டச் செயலாளர் இரா.ஆறுச்சாமி தலைமை ஏற்றார். இதில், ததீஒமு மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் நரவேட்டை நூலை அறிமுகம் செய்தும், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் களப்பிரன் மரிச்ஜாப்பி உண்மையில் நடந்தது என்ன? என்ற நூலினை அறிமுகம் செய்தும், இந்தியாவை உலுக்கிய வைக்கம் என்ற நூலினை தபெதிக நிர்வாகி மனோகரன் ஆகியோர் அறிமுகம் செய்து உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, நர வேட்டை நூலின் ஆசிரியர் சக்தி சூர்யா, மரிச்ஜாப்பி நூலை மொழி பெயர்த்த ஆசிரியர் ஞா.சத்தீஸ் வரன், வைக்கம் நூலின் ஆசிரியர் யு.கே.சிவஞானம் ஆகியோர் ஏற்பு ரையாற்றினர். இதில், தமுஎகச கோவை மாவட்டச் செயலாளர் அ.கரீம், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் கோவை ரவிக்கு மார், திராவிட தமிழர் கட்சி துணைப் பொதுச் செயலாளர் இளவே னில், தமிழக ஒடுக்கபட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளர் அஸ்ரப் அலி உள்ளிட் டோர் நூலினை பெற்றுக்கொண் டனர். எழுத்தாளர்கள், கலைஞர் கள் என நூற்றுக்கும் மேற்பட் டோர் திரளாக கலந்து கொண்ட னர். நிகழ்வின் முடிவில் தமுஎகச மாவட்ட துணைச் செயலாளர் த.நாகராஜ் நன்றி கூறினார்.