கோபி, செப். 04- பட்டா வழங்கி, நிலம் வழங்கா ததை கண்டித்து, நம்பியூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை பகுதி யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இதில் கூடக்கரை பகுதியில் வீட்டுமனை இல்லாத பொதுமக்கள் வீட்டுமனை கேட்டு, கடந்த பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்து வந்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு கூடக்கரை பொதுமக்கள் 53 பயனா ளிக்கு மட்டும் பொது பட்டா வழங் கப்பட்டது. இதில் விடுபட்டவர்க ளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி அப்பகுதி பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவ னத்திற்கு கொண்டு சென்றனர். பின் னர் 2018ம் ஆண்டு மீண்டும் 118 பயனா ளிகளுக்கு அதே பகுதியில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப் பட்டது. இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு 53 பயனாளிகளுக்கு, 2018 ஆம் ஆண்டு 118 பயனாளிகளுக்கு பட்டா வழங்கியுள்ளனர். ஆனால், இது வரை நிலம் ஒதுக்கி அளவீடு செய்து தராமல் அதிகாரிகள் இழுத்த டித்து வந்துள்ளனர். இது குறித்து அரசின் சேவை எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது, கூடக் கரை கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீட்டு மனைகள் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வருவாய் துறையினர் வழங்கியதாக கூறும் அளவீடு செய்த இடத்தை பொது மக்களுக்கு ஓப்படைக்க வேண்டி கூடக்கரை செட்டிபாளையம் பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் நம்பி யூர் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் தோல்வி யடைந்ததை தொடர்ந்து பொது மக்கள் நம்பியூர் கோபி சாலை யில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட னர் இதனையடுத்து நம்பியூர் தாசில்தார் ஜாகிர் உசேன் போராட் டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உரிய நடவடிக்கை எடுத்து உங்க ளுக்கு நிலம் அளவீடு செய்து தரப்ப டும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இத னால் வட்டாச்சியர் அலுவலகத் தில் ஒருமணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.