districts

நீர்வள மேலாண்மை: தேசிய அளவில் நாமக்கல் 2 ஆம் இடம்

நாமக்கல், மே 18- நாமக்கல் மாவட்டத்திற்கு நீர்வள பாதுகாப்பு மேலாண் மையில் தேசிய அளவில் 2 ஆம் இடம் கிடைத்துள்ளதாக மாவட்ட ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் ஒன்றிய நீர்வள ஆணையத்தின் சார்பில் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண் மையில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங் கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான இந்த விருதில் நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் 2 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்டம் முழுவ தும் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 322 கிராம  ஊராட்சிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நீர் வள பாதுகாப்பு நடவடிக்கைகளும், ஏரிகள், ஆறுகள், நீரூற்று கள் பாதுகாப்பு பணிகளும், புனரமைப்பு பணிகளும் மேற் கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பல் வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சுமார் 2.25 லட்சம் கட்டிடங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாவட் டம் முழுவதும் செயற்கை நீர் சேமிப்பு பணிகளை பொறுத்த வரையில் மொத்தமாக 1,713 பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு பண்னை குட்டைகள் அமைத்தல், தடுப்பணைகள், நீர்  சேமிப்பு குழாய், அகழி வெட்டுதல் போன்ற பணிகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு உள்ள பல்வேறு நடவடிக்கைகளால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் தேசிய அள வில் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்த மாவட்டமாக 2 ஆம் இடம் பெற்றுள்ளது, என தெரிவிக்கப் பட்டுள்ளது.