ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி சலுகை, கடன் தள்ளுபடி, ஊக்கத்தொகை என வாரி வழங்கும் நிலையில் உழைக்கும் மக்க ளுக்கு வழங்க வேண்டிய கல்வி, மருத் துவம், பொது விநியோகம், போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு மானி யத்தை வெட்டுவது; பெட்ரோலிய பொருட்கள், அரிசி, பருப்பு, உயிர் காக்கும் மருந்து போன்ற அத்தியா வசிய பொருட்களின் விலையை கடு மையாக உயர்த்தி வருகிறது. விலை வாசி உயர்விற்க்கேற்ப ஊதியம் கிடைக்காத நிலையில், விசைத்தறி, கட்டுமானம், விவசாயக் கூலித்தொழி லாளர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். பல்வேறு தேவைக ளுக்கு, அரசு வங்கியில் குறைந்த வட்டியில், கடன் கிடைக்காத நிலை யில், தனியார் நுண் நிதி நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், கந்துவட்டிக்காரர்களையே நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட் டுள்ளனர். இத்தகைய கையிரு நிலை யில் உள்ள மக்களிடம் நுண் நிதி கடன் நிறுவனங்கள் நகரம், கிராமங்கள் தோறும் ஏஜென்ட்கள் மூலம் ஊடுருவி எவ்வித அத்தாட்சி இல்லாமல் கூடு தல் வட்டிக்கு கடன் கொடுக்கின்றனர். கடன் கொடுப்பதற்கும், வசூல் செய்வதற்கும் மேற்கண்ட நிறுவனங் கள் ரிசர்வ் வங்கியின் நடைமுறை களை பின்பற்றுவதில்லை. மாறாக இவர்கள் கொடுப்பது குழு கடன்கள் அல்ல. ஆனால், குழுக்கடன் போல் ஜோடித்து கடன் வாங்கியவர்களை மற்றவர்கள் மீது வசூலிக்க நிர்பந்திக் கிறார்கள். குறிப்பாக, ஒரு பெண் ரூ.20,000 கடன் பெற்று 52 வாரத்திற்கு 625 ரூபாய் வீதம் வட்டியுடன் அசல் ரூ.20,000 சேர்த்து மொத்தமாக ரூ.32,500 கட்ட வேண்டியுள்ளது. பல் வேறு சூழ்நிலைகளால் கடனை கட்ட முடியாத நிலை ஏற்படும்பொழுது 10 சதவிகிதம் மற்றும் அதற்கு மேலாக கணக்கிட்டு வட்டியை அசலுடன் சேர்க்கின்றனர். கால அவகாசம் கேட் டால், நுண் நிதி நிறுவனங்கள் அத்து மீறல், அடாவடித்தனம், மாலை 6 மணிக்கு மேல் வீட்டிற்கு சென்று பணத்தை கட்டினால் தான் வெளியே செல்வேன் என நிர்பந்திப்பது போன் றவை பெண்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி, கடன் பெற் றவர்கள் தற்கொலை செய்து கொள் ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகி றது. கடன் பெற்ற பெண்கள், நிதி நிறுவன ஊழியர்களின் அத்துமீறல் குறித்து உள்ளூர் காவல் நிலையத் தில் புகார் கொடுத்தாலும், உரிய நட வடிக்கை எடுப்பதில்லை. திருச்செங் கோடு பகுதியில் கொரோனா ஊர டங்கு வேலையில்லா காலத்தில் விசைத்தறித் தொழிலாளிகளான மேனகா – சுப்ரமணி தம்பதியினர், கந்து கட்டி காரர்களின் பாலியல் மிரட்ட லால், மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து இறந்து விட்டனர். அதேபோல கடந்த 21.8.2024 ஓடப்பள்ளியில் சுஜாதா என்பவர் கடன் நிறுவனங்களின் நெருக்கடி யால் தற்கொலை செய்து கொள்வ தாக வீடியோ பதிவிட்டு விட்டு தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குமாரபாளையத்தில் கார்த்திகா என்ற பெண் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவாகியுள்ளது.
மேலும், 28.8.2024 அன்று வெடிய ரசம்பாளையம் பகுதியில் சம்பூர்ணம், வெப்படையில் மணிவண்ணன், குமாரபாளையத்தில் மும்தாஜ் போன்ற எண்ணற்ற தொழிலாளர்கள் கடன் கொடுத்தவர்களின் அடாவடித் தனத்தால் தற்கொலைக்கு முயற் சித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். மேற்கண்ட சம்பவங்கள் நமது கண்ணுக்கு தெரிந் தவை. இன்னும் தெரியாமலும், நாமக் கல் மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் தினமும் நடக்கக்கூடிய சம்பவங்களாக உள்ளது. வாழ வேண்டிய வயதில் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். நவீன தாராளமய கொள்கை, சந்தை பொருளாதாரம், உழைக்கும் மக் களை பாதுகாக்க நடவடிக்கை எடுக் காதது, விலைவாசி உயர்வுக்கும், வேலையின்மைக்கும் தீர்வு காணா தது, வாழ்க்கை தேவைக்கேற்ப சம்ப ளம், கூலி, உயர்வு கிடைத்திட நடவ டிக்கை எடுக்காதது, பணம் பற்றாக்கு றைக்கு கடன் வாங்கி வாழ்க்கையை நடத்த தொழிலாளர்களை ஊக்குவிக் கும் தற்போதைய சூழலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக் கல் மாவட்டக்குழு மேற்கண்ட பிரச்ச னையில் தலையிடுவது என முடிவெ டுத்து அதன் ஒரு பகுதியாக நூற்றுக் கும் மேற்பட்ட பெண்களிடம் நேரடி யாக ஆய்வு செய்து சந்தித்து விவரங் களை சேகரித்து வருகின்றனர். அதன் படி கூட்டு வட்டி குறித்த விபரம், கடன் பெறுவது, அதை முறையாக செலுத்து வது, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு தல் போன்ற விழிப்புணர்வு இல்லாத நிலையில் விசைத்தறி தொழிலாளர் கள் உள்ளனர். ஒரே நபருக்கு பல நிறுவனங்கள் வட்டிக்கு ஆசைப்பட்டு அவர் தகு திக்கு மேலே கடன் தருகிறது. இதன் காரணமாகவும் விசைத்தறி தொழிலா ளர்களின் கடன் பல மடங்கு உயர்ந்து வட்டியும் உயர்ந்து, அசல் வட்டி இரண்டும் கட்ட முடியாத நிலைக்கு விசைத்தறி தொழிலாளர்கள் தள்ளப் பட்டுள்ளனர். அப்படியே அசலும் வட்டியும் கட்டினாலும் கூட முறை யாக கட்டவில்லை எனக் கூறி கூடுதல் தொகை கேட்பதாலும் மன உளைச்ச லுக்கு ஆளாகி தற்கொலை போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்கி றது. மேலும் ரிசர்வ் வங்கியின் வழி காட்டுதல்படி சட்டபூர்வமாக நோட் டீஸ் அனுப்புவது தவிர்க்கபட்டு,
நீதி மன்றம் செல்லாமல், மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது. மேற் கண்ட நிகழ்வுகளை தடுத்திட, நுண் நிதி நிறுவனங்களில் அத்துமீறல் நட வடிக்கைகளால் நிகழும் தற்கொலை களை தடுத்திடவும், தமிழக அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயி றன்று (இன்று) சிறப்பு மாநாடு பள்ளிபாளையத்தில் நடைபெறுகி றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற் குழு உறுப்பினர் செ.முத்துக்கண் ணன், மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள், விசைத்தறி தொழிலாளர்கள், பல்வேறு பிரிவு களை சேர்ந்த முறை சாரா தொழிலா ளர்கள் பங்கேற்க உள்ளனர். முறைசாரா தொழிலாளர்களுக்கு முறையான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த சிறப்பு மாநாடு வெற்றி பெறட்டும்.