நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் பகுதியில் உள்ள சிஐடியு அலுவலகத்தில், புதிதாக நலவாரிய பதிவு சேவை மையத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி நிகழ்வை துவக்கி வைத்து பேசினார். விசைத்தறி சங்க மாவட்டத் தலைவர் கே.மோ கன், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி, சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்ரமணியன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ஏ. தண்டபாணி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், விசைத்தறி சங்க ஒன்றியப் பொரு ளாளர் முருகேசன் நன்றி உரையாற்றினார்.