districts

img

நாமக்கல் புத்தகத் திருவிழா நிறைவு ரூ.45 லட்சத்திற்கு விற்பனை

நாமக்கல், பிப். 11- நாமக்கல் புத்தகத் திருவிழாவில், ரூ. 45 லட்சத் திற்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. புத்தகத் திரு விழாவை சிறப்பாக நடத்தியவர்களுக்கு பாராட்டு விழா  ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  நாமக்கல் மாநகராட்சி, பரமத்தி சாலை, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் திங்களன்று மாவட்ட  ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் 3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்  ச.உமா தெரிவித்ததாவது, புத்தக வாசிப்பின் முக்கியத் துவத்தை இளைஞர்கள் உணர வேண்டும். நமது மாவட் டத்தில் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற முனைப்பு டன் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளை தெரி வித்துக்கொள்கிறேன். இந்த மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கு 9-ஆம் நாள் வரை சுமார் 48 ஆயிரம் பேர்  வந்துள்ளனர். 30 ஆயிரம் புத்தகங்கள் ரூ.45 லட்சத் திற்கு விற்பனை செய்யபட்டுள்ளது. இது கைபேசி தவிர்க்க முடியாதுள்ள காலத்தில் கூட புத்தக வாசிக்க அனைவரும் ஆர்வமுடன் உள்ளார்கள் என்பதை நாம்  அறிந்து கொள்ள முடிகிறது. அடுத்த ஆண்டும் மாபெரும்  புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்தும், என்றார்.  தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறை அலுவலர்கள், அரங்குகள் அமைத்த காவல்  துறையினருக்கு நினைவு பரிசுகள், கலைக்குழுவின ருக்கு பாராட்டுச்சான்றிதழ்கள், தூய்மைப்பணியாளர்க ளுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பல்வேறு போட்டிக ளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ச. உமா வழங்கினார்.