districts

img

ஊர்ப்புற நூலகருக்கு நல்நூலகர் விருது

திருப்பூர், டிச. 5 - தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக  நூலகர்களுக்கு இந்திய நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர் அரங்கநாதன் பெயரில் டாக்டர் எஸ். ஆர்.அரங்கநாதன் விருது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நடைபெறும் தேசிய நூலக வாரவிழாவில் வழங்கப் பட்டு வருகிறது.  அரசு பொது நூலகங்களில் நூல்களையும், வாசகர்களை யும் இணைக்கும் பணியை மேற்கொண்டு வரும் நூலகர் களை கவுரவிக்கவும், அவர்களின் பணியை ஊக்குவிக் கவும் சிறப்பாக சேவையாற்றி வரும் நூலகர்களுக்கு “நல்நூ லகர்  விருது” வழங்கப்படுகிறது.   திருப்பூர் மாவட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டிற்கான நல் நூலகர் விருதிற்காக கே.ஆண்டிபாளையம் ஊர்ப்புற நூல கம் ஊர்ப்புற நூலகர் ஆ.கு.கலைச்செல்வன் தேர்வு செய்யப் பட்டார். அவருக்கு நல்நூலகர் விருது சனிக்கிழமை வழங்கப்பட் டுள்ளது.  சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூல கம் கலையரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா வில் தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி இந்த விருதை வழங்கினார். 50 கிராமில்  வெள்ளி பதக்கம்,  சான்றிதழுடன் ரூ.5000 க்கான காசோலை யும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளிகல்விதுறை முதன்மை செயலாளர் காகர்லால் உஷா, பொது நூலகத் துறை இயக்குநர்  க.இளம்பகவத், பொது நூலகத்துறை இணை இயக்குநர் செ.அமுதவள்ளி, திருப்பூர் மாவட்ட நூலக  அலுவலர் வே.மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.