districts

img

அதிகாரிகள் மெத்தனத்தால் தாழ்குனி ஊராட்சி மக்கள் தவிப்பு

கோபி, ஜன.21- கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி  செய்யாமல் அதிகாரிகள் மெத்த னம் காட்டி வருவதால், தாழ்குனி ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி வருகின் றனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர்  அருகே உள்ள தாழ்குனி ஊராட் சிக்குட்பட்ட குதிரைக்கால்பாளை யம், புளியங்காட்டுசாலை, காமரா ஜபுரம், புளியம்பாளையம், அக்க ரைபாளையம், புளியஞ்சாலை, சிளுவம்பள்ளிகாடு உள்ளிட்ட குக் கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கி ராமங்கள் வறட்சியான பகுதி என்ப தால், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பில், 20க் கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறு கள் அமைத்து, மேல்நிலை குடிநீர்  தொட்டிகள் மூலமாகவும், மாக்கி னாங்கோம்பை கூட்டுக்குடிநீர் திட் டம் மூலமாகவும் வீடுகளுக்கு குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில், தாழ்குனி ஊராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டத் திலிருந்து விநியோகம் செய்யப்ப டும் குழாய்களில் உடைப்பு ஏற்பட் டுள்ளது. 20 நாட்களுக்கும் மேலா கியும் குழாய்களை சரி செய்யாத தால் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய் வது தடைபட்டுள்ளது. இதனால் காலை, மாலை ஆழ்குழாய் கிணறு கள் மூலம் மட்டுமே குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஊராட்சி நிர்வா கம் மூலம் செலுத்தப்படும் வரி  மாதந்தோறும், சரியாக செலுத்தி யும் குடிநீர் வடிகால் வாரியம் குழாய்களை சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுகு றித்து ஊராட்சி நிர்வாகம் துறை  ரீதியாக புகாரளித்தும் அதிகாரிகள்  மெத்தனமாக இருந்து வருகின்ற னர். மேலும், அடிப்படை வசதிக ளில் ஒன்றான மின்விளக்குகளில் பழுது ஏற்பட்டால், உடனடியாக சரி  செய்ய ஊராட்சிக்கு மின்விளக்கு கள் வழங்கப்படுவதில்லை.

இத னால் பொதுமக்கள் இரவில் அவதி படும் நிலை இருந்து வருகிறது. எனவே, தாழ்குனி ஊராட்சிக்கு சீரான குடிநீர் வழங்க இரண்டு இடங்களில் 30 லட்சம் கொள்ளளவு  கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும்.  கொளப்பலூர் - நம்பியூர் சாலை யில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்ப டுவதால் வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என நம்பியூர்  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக ளிடம் அப்பகுதி பொதுமக்கள் பல முறை கோரிக்கை அளித்து வருகின் றனர். ஆனால், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகமும் இதனை மெத்த னமாக கையாண்டு வருகிறது. எனவே, மேற்கண்ட கோரிக்கை களை அரசு அதிகாரிகள் விரைந்து  நிறைவேற்ற வேண்டும் என அப்ப குதி பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத்  தலைவர் வளர்மதி செந்தில்குமாரி டம் கேட்டபோது, கடந்த 20 நாட்க ளாக கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு, கிராம மக்க ளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய  முடியவில்லை. குடிநீர் தேவை உள்ள இடங்களில் தனது சொந்த செலவில் டிராக்டர்கள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, தாழ்குனி ஊராட்சி மக்களின் நலன்கருதி குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நிறை வேற்றி தர வேண்டும், என்றார்.