கோவை, நவ.24- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை கிழக்கு நகரச் செயலா ளராக என்.சுபாஷ் தேர்வு செய் யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை கிழக்கு நகரக் குழுவின், 11 ஆவது மாநாடு, கோவை மலையாளி சமாஜத் தில் தோழர் யு.கே.சிவஞானம் நினைவ ரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. ஆர். வனஜா செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகிர் வர வேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுரேஷ் துவக்கவுரையாற்றினார். நகரச் செயலாளர் என்.செல்வராஜன் அறிக் கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் வாழ்த்திப் பேசி னார். இம்மாநாட்டில், கோவை மாநகராட் சியின் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண் டும். மாநகரிலுள்ள டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும். மாநகரின் மையப்பகுதியில் சட்டமேதை அம்பேத்கரின் சிலையை அமைக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றி வரும் தூய்மைப் பணி யாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மக்கள் தொகைக்கு கேற்ப கூடுதலான தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். புலியகுளம் மசால் லே – அவுட் பகுதிக்குட்பட்ட மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். தற்போது புதியதாக மாநகராட்சி கட்டியுள்ள கடை களை முன்னுரிமை அடிப்படையில், சாலை யோர வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதனைத்தொடர்ந்து, கட்சியின் கோவை கிழக்கு நகரச் செயலாளராக என்.சுபாஷ் மற்றும் 11 நகரக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா நிறைவுரையாற்றினார். முடிவில், என்.சுபாஷ் நன்றி கூறினார்.