ஈரோடு, நவ.10- மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகாச் செயலாள ராக என்.பாலசுப்பிரமணி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகாவின் 13 ஆவது மாநாடு. தோழர் டிபிஎம் நினைவகத்தில் அமைக்கப்பட்ட தோழர் எம்.நாச்சிமுத்து நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சி.வீரபாண்டியன், என்.பழனிசாமி மற்றும் ஆர்.சரோஜா ஆகியோர் தலைமை வகித்த னர். கே.நடராஜ் கொடியேற்றினார். பி.அன்பு ஜனாதிபதி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். என்.ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.விஜயராக வன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசி னார். நகரச் செயலாளர் என்.பாலசுப்பிரமணி அறிக்கையை முன்வைத்தார். இம்மாநாட் டில், ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் புற்றுநோ யால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற அரசு தலைமை மருத்துவமனையில் தனி பிரிவை அமைக்க வேண்டும். ஈரோடு ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளை மாநகராட்சியு டன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் புகாரளிக்கச் செல்லும் மக்களை அலைக்கழிக்காமல், வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதனைத்தொடர்ந்து, கட்சியின் ஈரோடு தாலுகாச் செயலாளராக என்.பாலசுப்பிர மணி மற்றும் 9 தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி நிறைவுரையாற்றி னார். முடிவில், டி.ரவி நன்றி கூறினார்.