கரு.பழனியப்பன் பேச்சு திருப்பூர், ஜன.25- புராணங்களை வரலாற்று உண் மையாக கட்டமைக்கப் பார்க்கி றார்கள், இதில் ஏமாற்றப்படாமல் இருக்க புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று திரைப்பட இயக் குநர் கரு. பழனியப்பன் கூறினார். திருப்பூர் புத்தகத் திருவிழா வில், வெள்ளியன்று, வெற்றித் தமி ழர் பேரவை தலைவர் அரிமா எம். ஜீவானந்தம் தலைமையில் கருத் தரங்கம் நடைபெற்றது. இதில், ‘நயம் பட உரை’ என்ற தலைப் பில் திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் பேசினார். அப்போது அவர் பேசுகையில், சொல்ல வேண் டிய கருத்தை கேட்பவர்கள் மனம் புண்படும் என்று கருதாமல் உண் மையை நேரடியாக சொல்வதுதான் நயம் பட உரைப்பதாகும். அப்படி சொல்லும் பொழுது கேட்பதற்கு கடினமாக இருந்தாலும், பிற்பாடு வாழ்க்கை அனுபவத்தில் அது சரி யாக இருப்பதை உணரலாம். தந்தை பெரியார் அது போல் பேசிய வர். அதனால் தான் இன்று இந்தியா முழுமைக்கும் உயர் கல்வி படிக் கும் பெண்களில் 52% பேர் தமிழ் நாட்டினர். 1928 ஆம் ஆண்டு பெண் களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று சொன்னவர் பெரியார். 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பெண் களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பிறகுதான் இந்தியாவில் பெண் களுக்கான சொத்துரிமை சட் டம் கொண்டு வரப்பட்டது. இன்று புராண இதிகாசங்களை வரலாறு என கட்டமைக்க பார்க்கின் றனர். புத்தகங்களைப் படிப்பதன் மூலம் தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும். மனிதகுலம் தலை நிமிர்வதற்கு புத்தகங்கள் உதவியாக இருக்கின்றன. இன்று செல்போன் கலாச்சாரத்தில் அனை வரும் தலைகுனிந்து இருக்கிறார் கள். அதிலிருந்து விடுபட்டு தலை நிமிர்ந்து நிற்க, புத்தகங்கள் வாசிப்பு அவசியமாகும். குழந்தை களுக்கு மாணவர்களுக்கு புத்தக வாசிப்பை கொண்டு செல்வதன் மூலம் தலை நிமிர்ந்த சமூகத்தை உருவாக்க முடியும், என்றார். இந்த கருத்தரங்கில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்பாக பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடி வில் யுனிவர்சல் பள்ளிக் குழுமத் தின் தாளாளர் வினோதரணி நன்றி கூறினார்.