பொள்ளாச்சி, செப்.7- பொள்ளாச்சி மாட்டு சந்தையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஜாதி மத பேதமின்றி இஸ்லாமியர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ விழாவாக விநாயகர் சிலை மற்றும் சீர் வரிசையுடன் ஊர்வலமாக வந்து விநா யகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு செய்த னர். தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாட் டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் 7 ஆம் ஆண்டு சமத்துவ விநாய கர் சதுர்த்தி விழா சனியன்று கொண்டாப் பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதி யாக விநாயகர் சிலைக்கு மாட்டு சந்தை அருகில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து இஸ்லாமிய சகோ தர, சகோதரிகள் விநாயகருக்கு சீர்வரி சையாக விநாயகர் சிலை, ஆப்பிள், ஆரஞ்சு, மாலை, இனிப்பு வகைகளு டன் ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில், மாட்டு வியாபாரிகள் சங்க மாநிலச் செயலாளர் தென்றல் செல்வராஜ் திமுக கழக மாநில விவ சாய அணி துணைத் தலைவர் தமிழ் மணி, நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன், ஆகியோர் அனைவரையும் வரவேற்று இனிப்புகளை வழங்கினர் இந்நிகழ்வில், கலந்து கொண்ட ரெஜினா பானு கூறுகையில், ஜாதி, மத பேதமற்ற நல்லிணக்கத்தோடு அனைவ ரும் ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகிறோம். மேலும், பொள்ளாச்சி மாட்டுச் சந்தை பல்லாயிரக்கணக்கானர் கூடும் பகுதி இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள் ளிட்ட பகுதியில் இருந்தும் ஏராளமான வியாபரிகள் வந்து செல்கின்றனர். ஜாதி பேதமின்றி அனைவரும் ஒற்றுமையு டன் தொடர்ந்து 7 ஆவது ஆண்டாக மாட்டுச்சந்தையில் சமத்துவ விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் இங்கு வந்து சீர்வரிசை வழங்கி சிறப்பு செய்கின்றோம், என்றார்.