districts

img

நகராட்சி விரிவாக்கத்தில் பொதுமக்களை வஞ்சிப்பதா? காற்றில் பறந்த நகராட்சி கூட்ட தீர்மானங்கள்

உடுமலை, ஜன.2- நகராட்சி கூட்ட தீர்மானங்கள் படி, உடு மலை நகராட்சி விரிவாக்கத்தில் கணக்கம்பா ளையம் மற்றும் போடிபட்டி ஊராட்சிகளை இணைக்காமல் இருப்பது பொது மக்களை வஞ்சிக்கும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செயலாளர்  தண்டபாணி கடுமையாக சாடியுள்ளார். உடுமலை நகராட்சி விரிவாக்கத்தில் நக ரப்பகுதியில் இருக்கும் ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என நகராட்சி கூட்டங்க ளில் தீர்மானங்களை ஏற்காமல் பெயருக்கு ஒரே ஊராட்சியை மட்டுமே இணைத்து உள் ளது. உடுமலை நகராட்சி எல்லையை விரி வாக்கம் செய்ய வேண்டும் என அனைத்து  அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், தமிழ் நாடு அரசு கடந்த ஆண்டு உடுமலை நகராட்சி  எல்லையை விரிவு செய்ய சிறப்பு கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.  இதையடுத்து, உடுமலை நகராட்சி கூட்டம் இரண்டு முறை கூடி, பத்துக்கும் மேற் பட்ட ஊராட்சிகளை இணைத்தால் உட்கட் டமை சிறப்பாக இருக்கும் என்கிற எதிர்கால  நலனை கருத்தில் கொண்டு, தீர்மானங்கள்  நிறைவேற்றி அனுப்பட்டது. ஆனால் புத னன்று அரசு வெளியிட்ட அரசாணையில் பெரிய கோட்டை ஊராட்சி மட்டுமே நகராட்சி யுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது, இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செயலாளர் தண்ட பாணி கூறுகையில், உடுமலை நகராட்சியின்  எல்லைக்குட்பட்ட பல பகுதிகள் கணக்கம் பாளையம் ஊராட்சிக்கு சேர்ந்த பகுதியாக  உள்ளன. இதனால் இரு நிர்வாகத்திற்கும் பல  பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், கணக் கம்பாளையம் ஊராட்சி மற்றும் போடிபட்டி  ஊராட்சியில் மக்கள் தொகை அதிகரித்துள் ளது. இதனால், கிராம ஊராட்சி நிர்வாகத்தால்  குடிநீர் விநியோகம், குப்பைகளை எடுப்பது,  மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்து தர முடிவதில்லை.  இதை கணக்கில் கொண்டு, இந்த ஊராட்சி களை உடுமலை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைக் கப்பட்டது. ஆனால் புதனன்று வெளியிட்ட  நகர எல்லை விரிவாக்கத்தில் கணக்கம்பா ளையம் மற்றும் போடிபட்டி ஊராட்சிகளை இணைக்காமல் இருப்பது பொது மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கை. எனவே தமிழக அரசு கணக்கம்பாளையம் மற்றும் போடி பட்டி ஊராட்சிகளை உடுமலை நகராட்சி யில் இணைக்க வேண்டும் என்றார்.