திருப்பூர், ஜன. 3 - திருப்பூரில் மாநகராட்சி நிர்வாக மும், நொய்யல் பண்பாட்டு அமைப்பும் இணைந்து நொய்யல் நதிக் கரையோ ரம் சமத்துவப் பொங்கல் விழாவை நடத் துகின்றனர். தமிழர்களின் பாரம்பரியத் திருவிழா வான பொங்கல் பண்டிகையை ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்து, நொய்யல் பண் பாட்டு அமைப்பு, திருப்பூர் மாநகராட்சி யுடன் இணைந்து இவ்விழாவை நடத்து கின்றன. நொய்யல் நதிக் கரையோரம் தை முதல் நாள் ஜனவரி 14 அன்று மாநக ராட்சி நி்ரவாகத்தின் சார்பில் பொங்கல் வைக்கப்படுகிறது. இதில் மும்மதத்தின ரும் பங்கேற்று சமத்துவப் பொங்கல் வைக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக ஜனவரி 15, 16 ஆகிய இரு நாட்கள் யுனிவர்சல் திரையரங்கம் அருகே நொய்யல் நதிக் கரையோரம் நொய்யல் பண்பாட்டு அமைப்பின் சார்பில் பறை இசை, பரத நாட்டியம், இன்னிசைக் கச்சேரி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள் ளன. இந்த பொங்கல் விழாவிற்கு திருப் பூர் மக்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்யும் விதமாக அழகிய அழைப் பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. வியாழக் கிழமை இந்த அழைப்பிதழை மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமார் வெளி யிட, மாநகராட்சி ஆணையர் ராம மூர்த்தி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் இரண்டாவது மண்ட லத் தலைவர் கோவிந்தராஜ், நொய் யல் பண்பாட்டு அமைப்பின் நிர்வாகி கள் மு.ஜீவானந்தம், ஆர்.ஈஸ்வரன், மோகன் கார்த்திக், பி.ஆர்.நடராஜன், மு.திருப்பதி, பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கி ழமை திருப்பூர் தெற்குத் தொகுதி எம் எல்ஏ கே.செல்வராஜை சந்தித்து நொய் யல் பண்பாட்டு அமைப்பினர் பொங்கல் விழா அழைப்பிதழை வழங்கி பொங் கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். பொங்கல் விழாவிற்கான முன்னேற் பாட்டுப் பணிகளை நொய்யல் பண் பாட்டு அமைப்பினர் முனைப்புடன் செய்து வருகின்றனர்.