கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
நாமக்கல், மார்ச் 2- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டது. அம்மனுவில், குமாரபாளையத்திலிந்து திருச்செங் கோடு செல்வதற்கு 8 ஆம் எண் கொண்ட அரசு பேருந்து மட்டுமே இயக்கபட்டு வருகிறது. பேருந்து வசதி குறை வாக இருப்பதால் பொதுமக்கள் திருச்செங்கோடு செல் வதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு சில நேரங்களில் அரசு பேருந்து நிற்காமல் சென்று விட்டால் பெண்கள். குழந்தைகள் உள்ளிட்டோர் பெரும் தவிப்புக் குள்ளாகி வருகின்றனர். எனவே, குமாரபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்வதற்கு கூடுதல் பேருந்து களை இயக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
‘இந்தியா’ கூட்டணிக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் ஆதரவு
கோவை, மார்ச் 2- அமைதி, நல்லிணக்கம் மலர வேண் டும் என்றால், அது இந்தியா கூட்டணியி னாலே சாத்தியம் என்பதால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்ட ணிக்கு ஆதரவு தெரிவிப்பது என பல் சமய நல்லுறவு இயக்கம் முடிவெடுத் துள்ளது. தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்க மாநில பொதுக்குழு கூட்டம் கோவை சாயிபாபாகாலனி பகுதியில் அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் முகமது ரபி தலைமையில் நடைபெற் றது. இதன்பன் முகமது ரபி அளித்த பேட்டியில், பாஜக ஆட்சி தொடர்ந்தால் எந்த உணவு உட்கொள்ள வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிப்பார்கள். இதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகள் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பொதுக்குழு கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. நாட்டில் அமைதி நல்லிணக்கம் மலர வேண்டும். அதற்கு எடுத்துக் காட்டாக தமிழ்நாடு அரசு, நல்லிணக்க ஆட்சியாக, அனைவருக்கும் அனைத் தும் கிடைக்கும் வகையில் நடைபெற் றுக் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் முதல்வர் சகோதரத்துவத்தை உயர்த் திப் பேசிக் கொண்டிருக்கின்றார். இதற் காக பல்சமய நல்லுறவு இயக்கம் திமுக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு நாடாளு மன்ற தேர்தலில் ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதி களில் பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மா னம் நிறைவேற்றி இருக்கின்றோம், என்றார்.
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
நாமக்கல், மார்ச் 2- திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி யில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும் என இந் திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள் ளுவர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் 5 ஆவது கிளை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், கல் லூரியில் சிற்றுண்டி சாலை அமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து துறை வகுப்பறைகளி லும் மின்விசிறி, மின் விளக்கு, குடிநீர் வசதி கள் போன்றவற்றை முறையாக அமைத்துக் கொடுக்க வேண்டும். போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். விடு திகளில் மாணவிகளுக்கு முறையான உணவு வழங்க வேண்டும். ஆசிரியர் காலிப்பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் திருவள் ளுவர் அரசு கலைக்கல்லூரி கிளைத் தலைவ ராக ஜீவிதா, செயலாளராக யாழினி, துணைத் தலைவர்களாக சுபஸ்ரீ, தங்கவேல், துணைச் செயலாளர்களாக லோகேஸ்வரன், ஹரி உட் பட 15 பேர் கொண்ட கிளைக்குழு தேர்வு செய் யப்பட்டது. இம்மாநாட்டில், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் தங்கராஜ், மாவட்டச் செயலாளர் சரவணன், துணைத்தலைவர் நிசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யானை தாக்கியதில் இளம்பெண் படுகாயம்
தருமபுரி, மார்ச் 2- காரிமங்கலம் அருகே யானை தாக்கியதில் இளம் பெண் படுகாயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலை யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சவுளு கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் என்பவரது மனைவி ஜெயஸ்ரீ (20). இவர் சனியன்று விடியற்காலை நேரத் தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள தோட் டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவரை யானை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீயை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித் துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, கோடைகாலம் துவங்கவுள்ள நிலையில் வனப்பகுதிகள் வறண்டு வருவ தால், உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து ஒன்றை யானை வெளியே வந்துள்ளது. கடந்தாண்டும் இது போன்ற யானை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு அடர்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி
கோவை, மார்ச் 2- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு இயக்கம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்குரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக உரிமை, இதற்காக பணமும், பொருளும் பெறமாட்டோம். சாதி, சமயம் பாராமல் இன்றைய திருநாட்டின் மக்கள் நலனை காத்திட வாக்களிப்போம் என்கிற உறுதிமொழியை தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் மேற்கொண்ட னர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி கோட்டப் பொறியாளர் அலுவல கம் முன்பு நடைபெற்ற நிகழ்வில், கோட்ட இணைச்செயலா ளர் கே.இடும்பன் தலைமை ஏற்றார். இதில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச் செய லாளர் அ.அம்சராஜ், கோட்டச் செயலாளர் எஸ்.ஜெகநாதன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, சேலம் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்ப இயக்கத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சுப்பிரமணி தலைமை ஏற் றார். இதில், மாநில துணைத்தலைவர் சிங்கராயன், மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.
ஆற்றில் போதுமான தண்ணீர் இல்லை: கோடைக் காலத்தை சமாளிப்பது எப்படி?
அவிநாசி, மார்ச்.2 ஆற்றில் போதுமான தண்ணீர் இல்லாததால் தேங்கி யுள்ள நீர் சுத்திகரித்து அனுப்பப்படுகிறது. இதனால் தான் சுவைப்புத்தன்மை குறைவாக உள்ளது என அதிகாரி கள் கூறியுள்ளனர். அவிநாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சமீப கால மாக பொதுமக்கள் குடிக்கின்ற தண்ணீர் சுவைப்புத்தன்மை இன்றி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பேரூராட்சி மன்றத்தில் நீர் ஏத்து நிலையம், சுத்திகரிப்பு நிலையம் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவிநாசி பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி பொன் னுச்சாமி தலைமையில் பேரூராட்சி உறுப்பினர்கள், அதிகா ரிகள் உள்ளிட்டோர் சிறுமுகை சென்று ஆற்று நீர், நீர் சுத்தி கரிப்பு இடங்களை ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். ஆற்றில் போதுமான தண்ணீர் இல்லாததால் தேங்கியுள்ள நீர் சுத்திகரித்து அனுப்பப்படுகிறது. இதனால் தான் சுவைப்புத் தன்மை குறைவாக உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு சில பேரூராட்சி உறுப்பினர்கள் சிறுமுகையில் பொதுமக்கள் குடிக்கும் நீரையும் சுவைத்துப் பார்க்கும்போது அவிநா சியை விட சுவைப்புத்தன்மை குறைவாகத்தான் இருந்துள் ளது. மழை பெய்தால் ஆற்றின் நீர்மட்டம் அதிக்கரிக்கும் தண் ணீரின் சுவைப்புத்தன்மை மாறும் என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். கோடைக்காலம் துவங்கவுள்ள நிலையில், குடிநீர் பிரச்ச னையை சமாளிப்பது என்பது பேரூராட்சி நிர்வாகதிற்கும், மாவட்ட நிர்வாகதிற்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக் களின் எதிர்பார்கின்றனர்.
குரங்குகளின் தாகம் தீர்க்கும் இளைஞர்களுக்கு பாராட்டு
சேலம், மார்ச் 2- வறட்சி நிலவும் ஏற்காடு மலைப்பாதை யில், குரங்குகளின் தாகம் தீர்க்கும் இளை ஞர்களின் சேவையை சுற்றுலாப் பயணிகள் பாராட்டி வருகின்றனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப் படும் ஏற்காடு மலைப்பாதை சுமார் 20 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. கோடைகாலத்தில் கடும் வறட்சி நிலவும் பட்சத்தில் ஏற்காடு மலைப்பகுதியில் தண் ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் தண்ணீர் கிடைக்காமல் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக் குள் நுழைந்து விடுகின்றன. மேலும், தண் ணீர் தேடி நகரத்துக்குள் நுழையும் குரங்கு கள் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சோக சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே, அந்த குரங்குகளின் தாகத்தை தீர்க்க வும், அவை தண்ணீரை தேடி அலையும் போது ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும், சமூக நல அமைப்பைச் சேர்ந்த இளைஞர் கள் முடிவு செய்தனர். அதற்காக ஏற்காடு செல் லும் மலைப்பாதையில் சாலையின் இருபுற மும் உள்ள தடுப்புச்சுவரில் ஆங்காங்கே சிறிய தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி குரங்குகளின் தாகம் தீர்க்க ஏற்பாடு செய்தனர். அதற்காக வனத்துறையின் உரிய அனுமதியினை பெற்று அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப தொடங்கி குரங்குகளின் தாகம் தீர்த்து வரு கின்றனர். நாள்தோறும் காலையில் 6 பேர், மாலையில் 6 பேர் தாங்களே தனித்தனி குழு வாக இளைஞர்கள் பிரித்துக் கொண்டு குரங் குகளுக்கான தொட்டியில் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். இவர்களது இந்த சேவையை சுற்றுலாப் பயணிகள் பாராட்டி உள்ளனர்.