districts

img

எம்ஆர்பி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.15-  நிரந்தர செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பிடக் கோரி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் சங்கத்தினர் கோவை யில் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி விவரங்கள் கேட்கப்பட்ட 1500 செவிலியர்களை விரைந்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும். சென்னை கிளை மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பணி யில் இணைந்த நாள் முதல் கால முறை ஊதியம் வழங்க வேண் டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் சங்கத்தினர் கோவை ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்டத் தலைவர்  ரா.ராம லட்சுமி தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலா ளர் தங்கமுனீஸ்வரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்  தலைவர் சையத் உசேன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முடி வில், அலோடியா நன்றி கூறினார்.