districts

img

எம்.பி., நிதி ஒதுக்கீட்டில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம்

பி.ஆர்.நடராஜன் எம்.பி., திறந்து வைத்தார் கோவை, செப்.1- குமரபாளையம் ஊராட்சியில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமு தாயக்கூடத்தை மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத் தார். சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன் றியம், குமரபாளையம் ஊராட்சியில் ஏடி காலனி உள்ளது. இங்கு நூற் றுக்கும் மேற்பட்ட அருந்ததிய மக்க ளின் குடியிருப்புகள் உள்ளது. எளிய உழைப்பாளி மக்களான இந்த அருந் ததிய மக்கள் தங்களின் சுப, துக்க நிகழ்வுகளை தனியார் திருமண மண் டபங்களின் பெரிய தொகை வாட கையாக கொடுத்து நடத்த முடியாத நிலை இருந்தது. இந்த சிரமத்தை கருதி இங்கு சமுதாய கூடம் அமைக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனிடம் கோரிக்கை வைத்தி ருந்தனர். ஒன்றிய மோடி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றை காரணம் காட்டி தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய் யவில்லை. இருப்பினும் ஒதுக்கப் பட்ட தொகுதி மேம்பாட்டு நிதி யினை எளிய உழைப்பாளி மக்க ளின் நியாயமான கோரிக்கை என்ப தால் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  பி.ஆர்.நடராஜன் எம்பி ரூ.38 லட்சம் நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து இதற்கான நிலத்தை குமரபாளை யம் ஊராட்சி நிலத்தை அடையாளம் கண்டு கட்டுமான பணிகள் துவங் கப்பட்டது.

 கட்டுமான பணிகள் முழுமை யாக நிறைவுற்று இதற்கான திறப்பு விழா குமரபாளையம் ஊராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு குமர பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாவுத்திரி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் சமுதாயக்கூடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். முன் னதாக, இந்நிகழ்வில் திமுக கிழக்கு  ஒன்றிய செயலாளர் முத்துமாணிக் கம், விவசாயிகள் சங்கத்தின் மாவட் டக்குழு உறுப்பினர் திருமலை சாமி,  விவசாய தொழிலாளர் சங்கத்தின் சுல்தான்பேட்டை ஒன்றிய செயலா ளர் ரவிச்சந்திரன், சிஐடியு பொறுப்பா ளர் ரங்கநாதன், செல்வராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சூலூர் தாலுகா தலைவர் ரவிதாஸ் மற்றும் சுல்தான்பேட்டை, குமரபாளையம் ஊராட்சிகளின் தலைவர், துணை தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர் கள், திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சி களின் பிரதிநிதிகள் திரளானோர் பங்கேற்றனர்.  முன்னதாக, தங்களின் பகுதிக்கு புதிய சமுதாயக்கூடத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்து விரைந்து கட்டிடம் கட்டி திறப்பு விழா செய் திட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜனுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தனர்.