districts

img

அரசுப்பள்ளிகளில் சமூக விரோதிகளின் நடமாட்டம்

நாமக்கல், செப். 6 -  அரசுப்பள்ளியில் புகுந்து அநா கரிக செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் வெள்ளி யன்று எருமப்பட்டியில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் எருமப் பட்டி பேரூராட்சி அம்பேத்கர் நகர்  பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய  துவக்க பள்ளி உள்ளது. இங்கு  கடந்த ஞாயிறன்று சமூகவிரோதி கள் சிலர் மனித கழிவுகளை, பள்ளி யின் சுவற்றிலும், சமையல் கூட  அறை பூட்டிலும் பூசி அநாகரீகத் தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் மாவட்ட முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந் நிலையில், இச்சம்பவம் தொடர் பாக எருமப்பட்டி போலீசார் சிலரை  பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், ஊராட்சி ஒன்றிய துவக் கப் பள்ளியில் சுற்றுச்சுவர் முழுவ தும் கம்பி வேலி அமைத்திட வேண் டும். பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் மின்சார விளக்கு வசதி  செய்து தர வேண்டும். இரவு நேர  காவலர் நியமிக்கப்பட வேண்டும். அரசுப்பள்ளிகளுக்குள் சமூக விரோ திகள் நுழைவதை தடுக்க வேண் டும். பள்ளி வளாகம் முழுவதும் கண் காணிப்பு கேமரா பொறுத்திட வேண்டும். பள்ளியில் சுகாதாரத்தை உறுதிப்படுத்திட வேண்டும். எருமப் பட்டி பகுதி உள்ள அனைத்து பள்ளி களிலும் விடுமுறை நாட்களில் காவல்துறை தொடர் கண்காணிப்பு களை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  எருமப்பட்டி பேருந்து நிறுத்தம்  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, எஸ்.கே.சிவச்சந்திரன் தலைமை ஏற்றார். இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் எஸ்.கே.கந்தசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பி. செல்வராஜ், செயலாளர் கே.தங்க மணி, நாமக்கல் பிரதேசக் குழு செய லாளர் இ.எம்.ராஜேந்திரன் மற்றும்  கிளைச் செயலாளர்கள் ஜெயரா மன், ஸ்ரீதர், திருப்பதி, ராமகிருஷ் ணன், சிவசங்கர், குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.  ஆர்ப்பாட்டத்தின் முடிவில், எரு மபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணை யாளரை சந்தித்து, பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  இடித்து உடைக்கப்பட்ட சுற்றுச்சு வரை போர்க்கால அடிப்படையில் கட்டிட வேண்டும் என மனு அளித்த னர்.