தருமபுரி, நவ.25- தருமபுரியில் ரூ.699 கோடியில் தொழில் முதலீடுகளுக்கான புரிந் துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டன. தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி கலையரங்கில் புதிய தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் பரிமாறும் நிகழ்ச்சி ஆட்சி யர் கி.சாந்தி தலைமையில் நடை பெற்றது. டி.என்.வி.எஸ்.செந்தில் குமார் முன்னிலை வகித்தார். புரிந் துணர்வு ஒப்பந்தங்களை தொழில் நிறுவனங்களுடன் பரிமாறிக் கொண்ட பிறகு மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், உலக முதலீட்டாளர் கள் மாநாடு அடுத்தாண்டு ஜன.7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. அனைவரை யும் உள்ளடக்கிய நிலையான மற் றும் நீடித்த வளர்ச்சியினை நோக்க மாகக் கொண்டு, டிரில்லியன் டாலர் பொருளதாரத்தை அடைவதில் இம் மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும். அதிகளவில் முதலீட்டாளர்கள் பங் கேற்கவும், மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறையில் அதிகப்படியான முதலீடுகளைத் திரட்ட அதிக அள விலான சாத்தியக்கூறுகள் உள்ள தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் முதலீடுகள் மாநாடு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உள்ளூர் வளத்தை பொறுத்து மாவட்டங்களில் முதலீட்டு வாய்ப்பு களைக் கண்டறியவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை யில் உள்ள வாய்ப்புகளை ஆர்வ முள்ள தொழில் முனைவோருக்கு எடுத்துச்செல்லவும் இந்த தொழில் முதலீடுகள் மாநாட்டின் நோக்க மாகும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு ரூ.500 கோடி மதிப் பிலான முதலீடுகள் பெற்று பல் வேறு துறைகளில் தொழில்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் மேற்கொள்ள இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படை யில் தருமபுரி மாவட்டத்தில் 47 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.699.17 கோடி புதிய முதலீடுகள் கண்டறியப்பட்டு புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் வாயிலாக சுமார் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு கள் புதிதாக உருவாக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தொழிற் பேட்டையில் ஸ்டீல், இன்ஜினிய ரிங், அக்ரோ, ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரிக் வாகன உற்பத்தி, பேட் டரி, டெக்ஸ்டைல்ஸ், உணவு உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ள டக்கிய சுமார் 298 தொழில் நிறுவ னங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன, என்றார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங் கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.பழனியப்பன், தொழில் மைய பொதுமேலாளர் பா. கார்த்திகைவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.