districts

img

போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

கோவை, ஜூன் 10- கோவை மாநகரப் பகுதிகளில், கடந்த 2 நாட்களாக கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டி கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்க னவே மாநகரின் சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து  காணப்படுகின்றன. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்க ளாக முகூர்த்த தினம் என்பதாலும், விடுமுறை தினங்கள் என்ப தாலும், பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல்  அதிகம் காணப்பட்டது. குறிப்பாக, திருச்சி சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, ஆத்துப்பாலம், குனிய முத்தூர் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் காலை  மற்றும் மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்துக் காணப் பட்டது. இதனிடையே, கோடை விடுமுறை முடிந்து திங்க ளன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கோவையில் போக் குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. மழை துவங் கும் முன்பு சாலைகளை சீரமைத்து, மேம்பாலங்களை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என  கோவை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.