districts

img

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர், மார்ச் 25- குண்டடம் அருகே, சாலைப் பணி கள் தொடங்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் பணிகள் நிறைவடையா ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளா வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறி யதாவது, தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே உள்ள நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தும்பலப்பட்டி பகுதியில் பழுதடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் எனப்  பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த னர். இதையடுத்து, தமிழ்நாடு முதல மைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத் தின்கீழ் நிதி ஒதுக்கப்பட்டு 3 கி.மீ. தொலைவுக்கு சாலை புதுப்பிக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த பழைய சாலை பெயர்த்து, புதி தாக ஜல்லிக் கலவை கொட்டப்பட்டது. அதன் பின்னர் கடந்த 4 மாதங்களாக எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால், ஜல்லிக்கற்கள் சாலை முழு வதும் பரவி வாகனங்கள் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வழி யாகச் செல்லும் வாகனங்களின் ஓட்டு நர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின் றனர். சாலை அமைக்கும் பணியைத் தொடர்ந்து செய்திருந்தால் 1 மாத  காலத்தில் இப்பணியை முடித்திருக்க லாம். ஆனால் அதிகாரிகள், அலுவலர் களின் மெத்தனப் போக்கால் பணிகள்  நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட் டுள்ளது. கடந்த 3 மாதங்களில் 10க்கும்  மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் கீழே  விழுந்துள்ளனர். இதுகுறித்து, சம்பந் தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய  கவனம் செலுத்தி சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றனர்.